Friday, August 17, 2018

போராட்டத்தின் தேவை புரிந்ததா ரஜனி?


போராட்டம், போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகி விடும் என்று சொன்ன ரஜனியா, நானே போராடியிருப்பேன் என்று சொன்னது ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வரும் வடிவேலு காமெடிக் காட்சியான "அது வேற வாய்'  என்ற வசனம்தான் நினைவுக்கு வந்தது.

ஆனாலும் ரஜனியின் இந்த அறிக்கையை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.

கலைஞருக்கு மெரினாவில் இடம் தராவிட்டால் நானே போராடி இருப்பேன் என்று உங்களை போராட்டத்திற்கு தயார் செய்த அதே

எடுபிடி, குருமூர்த்தி, மோடி கும்பல்தான்

எங்கள் வாழ்வாதாரத்தைப் பறித்து, எங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றிக் கொண்டிருப்பவர்கள்.

அதனால்தான் நாங்கள் அன்றாடம் போராட வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.



No comments:

Post a Comment