Wednesday, August 1, 2018

மல்லய்யாவின் சொகுசு முக்கியம் - நீதிபதி



மல்லய்யாவை இந்தியாவிற்குஅனுப்புவது தொடர்பான வழக்கு நேற்று லண்டன் நீதிமன்றத்தில் நடந்துள்ளது.

மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு ஜெயில் வசதிக்குறைவானது என்று முந்தைய வாய்தாக்களில் விவாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அரசு அவரை அடைத்து வைக்கும் சிறையின் அறையின் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த புகைப்படங்கள் இயற்கை ஒளியில் எடுக்கப்பட்டவை அல்ல, இந்திய அரசை நம்ப முடியாது, மாற்றம் செய்து அனுப்பப் பட்டவை என்று மல்லய்யா வக்கீல் வாதாடியுள்ளார். (மோடி அரசின் போட்டோஷாப் புகழ், லண்டன் நீதிமன்றம் வரை பரவியுள்ளது என்று சங்கிகள் புளகாங்கிதம் அடைவார்களோ?) 

அந்த வாதத்தை ஏற்றுக் கொண்டுள்ள நீதிபதி, மும்பை சிறைச்சாலையை வீடியோ எடுத்து அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

ஒரு குற்றவாளியின் சொகுசு வாழ்க்கைக்காக் இவ்வளவு தூரம் கவலைப்படுகிற நீதிபதியின் மனிதாபிமானம் பாராட்டுக்கு உரியது !!!!!!!

விஜய் மல்லய்யாவின் அறையில் பார் இருக்க வேண்டும் . . .
அவர் வேறு ஏதாவது கேட்டாலும் ஏற்பாடு செய்து தர வேண்டும் . .
கடற்கரையில் அவர் பொழுதை உல்லாசமாக கழிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் . . .

என்றெல்லாம் உத்தரவு வந்தாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை . .

ஏனென்றால் மல்லய்யா தனி நபரல்ல . . .

உலக மக்களை சுரண்டி வரும் கொழுப்பெடுத்த கார்ப்பரேட் முதலாளிகளின் பிரதிநிதி . . .


No comments:

Post a Comment