Tuesday, August 14, 2018

எப்படி ஆறுதல் சொல்ல?



இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவருமான தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபுவின் மூத்த மகன் சூர்யா, தேர்வில் தோல்வியுற்றதால் மரணத்தைத் தேடிய துயரச் செய்தி காலை முதலே மனதை வாட்டி வருகிறது.

தேர்வு முடிவுகளையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாத பெற்றோரின் மகனைக் கூட இப்படிப்பட்ட முடிவிற்குத் தள்ளியது எது?

மாணவர்களுக்கு தொடர்ந்து அழுத்தத்தை அளிக்கும் கல்வி முறையா?

நல்ல மதிப்பெண்கள் எடுக்காதவர்களை அலட்சியமாக பார்க்கும் சமூகமா?

தோழர் ரமேஷ்பாபுவிற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.

அவரோடு பேசும் தைரியம் கூட எனக்கு இல்லை.

காலம்தான் இந்த ஆறாத்துயரிலிருந்து அவரை மீட்க வேண்டும்.


No comments:

Post a Comment