Friday, August 31, 2018

இ.பெ.கா நெய்யே . .பாஜக கையே . . .

இந்துஸ்தான் பெட் ரோலிய கார்ப்பரேஷன் நெய்யே . . .
பாஜக கையே . . . .

இந்த பிழைப்புக்குப் பதில் காவிக்கயவர்கள் பிச்சையெடுத்து கொடுத்திருக்கலாம்.



கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ.25 கோடி நிதி அளித்தார்களா?
பாஜக பொய்யை அம்பலப்படுத்திய கேரள மக்கள்! 

திருவனந்தபுரம், ஆக.30-

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு,பாஜக சார்பில் ரூ. 25 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள் ளது என்று பாஜகவினர் சமூகவலைத் தளங்களில் பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டது அம்பலமாகியுள்ளது.கேரளம் மிகப்பெரிய அழிவைச் சந் தித்துள்ள போது, பலரும் தங்களால் இயன்ற உதவிகளை கேரளத்திற்கு அளித்து வருகின்றனர். ஆனால், ஆர்எஸ்எஸ், பாஜக-வினர் உள்ளிட்ட சங்-பரிவாரங்கள் மட்டும் கேரள வெள்ளப் பாதிப்பைக் கொண்டாடினர். 

கேரள மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதும், ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்ததும்தான் இந்த பேரழிவுக்கு காரணம் என்று வன்மம் கக்கினர். கேரள நிவாரண நிதிக்கு பாஜகவினர் நிதி அளிக்காதது மட்டுமன்றி, மற்றவர்களும் நிதியளிக்க வேண்டாம் என்று தடுத்த சம்பவங்களும்அரங்கேறின.இது கேரள மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பாஜக-வின் உண்மை முகம் அறியாமல் இதுவரை அக்கட்சியில் இருந்த பலர், கூட்டம்கூட்டமாக அங்கிருந்து வெளியேறியதும் நடந்தது. 

தற்போது கேரள மக்களை சமாளிக்கும் வேலையில் இறங்கியுள்ள பாஜகவினர் வழக்கம்போல, ‘போட்டோஷாப்’ கலை மூலம் போலியான புகைப்படங்களை வெளியிட்டு பொய்ப்பிரச்சாரங்களை அவிழ்த்துவிடத் துவங்கியுள்ளனர். அதில் ஒன்றாகத்தான், 

பாஜகவைச் சேர்ந்த ஸ்ரீதரன் நாயர் என்பவர், அவரது முகநூலில் “பாஜக அமைச்சர்களும்,நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 25 கோடி ரூபாயை வழங்கியுள்ளனர் ” என்று குறிப்பிட்டு, ஒரு புகைப்படத்தை உலவவிட்டார்.அந்த புகைப்படத்தில், பாஜக மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், பாஜக எம்.பி. முரளிதரன் ஆகியோர்கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் காசோலையை வழங்குவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. எப்போது எப்போது என்று எதிர் பார்த்த கேரள பாஜக-வினரும், ஸ்ரீதரன்நாயர் வெளியிட்ட புகைப்படத்தை, இஷ்டத்திற்கு முகநூலிலும், ட்விட்டரிலும் ஆயிரக்கணக்கில் ஷேர் செய்து, பெருமை பீற்ற ஆரம்பித்தனர். 

இது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. நிதியளித்தது உண்மைதானா? என்று சமூகவலைத்தளங்களில் சர்ச்சைகள் எழுந்தன. அதற்கேற்பவே, கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் என்பது போல, பாஜகவினரின் புளுகுக் கதை எட்டுமணிநேரம்கூட நீடிக்கவில்லை. மத்திய அமைச்சர் கண்ணந்தானம் தலைமையில் முதல்வரிடம் நிதியளிப் பது போன்ற புகைப்படம் உண்மைதான் எனவும், ஆனால், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பொரேசன் சார்பிலான நிதியளிப்பில்தான் அவர் கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் சீக்கிரத்திலேயே வெளிப்பட்டு விட்டது. 

படத்தை வெளியிட்ட ஸ்ரீதரன் நாயர், கவனமாக இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் அதிகாரிகளை புகைப் படத்திலிருந்து வெட்டியெறிந்துவிட்டு, அமைச்சர் கண்ணந்தானமும், பாஜக எம்.பி. முரளிதரனும் இருப்பது போன்றபடத்தை மட்டும் போட்டு- பாஜக சார்பில்ரூ. 25 கோடி நிதி என்று கூறியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.பாஜக சார்பில் ஒரு பைசா கூட நிதி அளிக்கப்படாத நிலையில், ஸ்ரீதரன் நாயர் உள்ளிட்ட பாஜகவினர் செய்த பொய்ப்பிரச்சாரம், கேரள மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், தற்போது பாஜக-வுக்கு எதிராகவே பூமாராங் ஆக திரும்பியுள்ளது.

 — with Sanmuga Veerama

1 comment:

  1. பாஜக பொய்யே என்றும் சொல்லலாம்

    ReplyDelete