Friday, July 28, 2017

நித்தியை விட கேவலமாய் அவரின் . . . .



அசிங்கம் பிடித்த ஆபாசப் போலிச்சாமியார் நித்தியானாந்தா.  அந்த மனிதனின் சமீபத்திய சித்து விளையாட்டு திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்றை ஆக்கிரமித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது பற்றியும் சில எலும்புத்துண்டு பிராணிகள் சுவரொட்டி அடித்து ஒட்டியது பற்றியும் முன்பே எழுதியுள்ளேன்.

தந்தை பெரியாரை இழிவுபடுத்தி நித்தி பேசியதைக் கண்டித்து தமுஎகச வின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் கருப்பு கருணா முகநூலில் பதிவிட்டதை தொடர்ந்து நித்தியின் சீடர்கள் என்ற பெயரில் பலர் அங்கே ஆபாச வாந்தி எடுத்து வந்தனர். தமுஎகச வின் இன்னொரு முக்கியமான பொறுப்பாளரான தோழர் வெண்புறா சரவணன் நித்தி அடியாட்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார்கள்.

இன்று நித்தி வளர்த்தெடுத்துள்ள பொறுக்கிகள் தோழர் கருணா மற்றும் தோழர் வெண்புறா பற்றி ஒரு ஆபாச வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். பெண்களை எவ்வளவு கேவலமாக அந்த கூட்டம் பார்க்கிறது என்பதற்கு அந்த வீடியோ ஒரு உதாரணம்.

எலும்புத்துண்டிற்காக அலைகிற இதர பிராணிகள் போல மார்க்சிஸ்டுகள் அவர்களின் பேரங்களுக்கு அடிபணியாமல் இந்த கூட்டத்திற்கு எதிராக உறுதியாக இருக்கிறார்கள் என்ற ஆத்திரத்தை ஆபாசமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

நித்தி எனும் போலிச்சாமியாரைப் போலத்தானே அவரது சிஷ்யகேடிகளும் கேவலமாக இருப்பார்கள்.

இதற்கெல்லாம் கலங்காமல் அவர்களின் பணி தொடரும். அவர்களோடு நாங்கள் எல்லாம் உறுதியாக நிற்போம்.

தமுஎகச வெளியிட்ட கண்டன அறிக்கை கீழே

 
கருப்பு கருணா குடும்பத்தை
இழிவுபடுத்தும் வீடியோ பதிவு
===========================
தமுஎகச கண்டனம் - நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
----------------------------------------------------------------------------------
திருவண்ணாமலையில் நித்தியானந்தா சீடர்களின் மலை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைளை மக்கள் ஆதரவோடு தடுத்த போராட்டத்திலும், முற்போக்குக் கருத்துகளைப பரப்புரை செய்வதிலும் முன்னணியில் நிற்பவரான கருப்பு கருணா, அவரது குடும்பத்தினர், தோழர்களை இழிவுபடுத்தித் தயாரிக்கப்பட்ட காணொளிக் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தமிழக அரசும் காவல்துiயும் உடனடியாகத் தலையிட்டு இந்தக் கோழைத்தனமான இழிசெயலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளருமான கருணா போன்ற ஒப்பனையோடு உள்ள ஒருவரிடம் இன்னொருவர் பேட்டி காண்பது போன்ற அந்தக் காணொளிப் பதிவு கருணாவின் பெயரையும், குடும்பத்தினரையும, அவருக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஓவியர் வெண்புறா சரவணனையும் நேரடியாகக் குறிப்பிட்டு, பாலியல் வக்கிரத்தோடும் அவமதிக்கிறது.

இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “சட்டவிரோத ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுகிறவர்களின் இப்படிப்பட்ட செயல்கள் அவர்கள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்தவர்கள் என்பதைத்hன் எடுத்துக்காட்டுகின்றன. தங்கள் பக்கம் நியாயம் இருந்தால் அதை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு மாறாக, இத்தகைய அற்பத்தனமான முயற்சிகளில் இறங்குகிறார்கள் என்றால், போராட்டம் நியாயமானது என்பதும் தெளிவாகிறது. இத்தகைய தாக்குதல்களால் முற்போக்கு இயக்கத்தினர் ஒருபோதும் அஞ்சிப் பின்வாங்கிவிட மாட்டார்கள்,” என்று கூறியுள்ளனர்.

“அதேவேளையில் இது ஒரு கோழைத்தனமான செயல் மட்டுமல்ல, அநீதிகளை அம்பலப்படுத்தி மக்களுக்காகப் போராட்டக் களம் காண்கிற மற்றவர்களையும் அச்சுறுத்தி ஒதுங்க வைக்க முயல்கிற சூழ்ச்சியுமாகும். அந்தக் காணொளிக் காட்சியைத் தயாரித்தவர்கள், ஆதரிப்பவர்கள் யார் யார் என அதற்கான இணைப்புகளிலேயே இருக்கிறது. ஆகவே, அடித்தட்டு மக்களுக்கான கலைஞருமான கருணாவை இவ்வாறு சிறுமைப்படுத்த முயன்றவர்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும் உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment