Friday, March 21, 2014

வைகோவை ஏன்யா அசிங்கப்படுத்தறீங்க?

இன்று முகநூலில் கட்சி வேறுபாடு இல்லாமல் பலரும்
பகிர்ந்து கொண்டிருக்கிற நிலைத் தகவல் இதுதான்
 ---------------------------------------------------------------------------------------------------------------
நிறம் மாறுவதற்கு முன்....
திரு.வைகோ....பல ஆண்டுக்கு முன் பேசியது...



செய்தி -(தினகரன், 25.12.1992) - திரு. வைகோ பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பேசிய பேச்சு.,,

பாபர் மசூதியை இடித்து, தகர்த்து தரை மட்டமாக்கிய செயல் இந்தியாவின் மதச்சார்பின்மை மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலாகும். பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். இயக்கம், விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்பு இவை அனைத்தையும் பரிபாலனம் செய்யும் சங் பரிவார் எனும் மத வெறிக் கூடாரத்தின் உத்தரவுகளை அமல்படுத்தக் கூடிய குற்றவாளிகள் என்று எல்.கே. அத்வானியையும், முரளிமனோகர் ஜோஷியையும் குற் றம் சாட்டுகிறேன். பாபர் மசூதியின் மூன்று விதானங்களும் உடைக்கப் பட்டபோது எழுந்த சத்தம், காந்தியடிகளின் மெலிந்த தேகத்தில் பாய்ந்த மூன்று தோட்டாக்களின் ஓசையை நினைவூட்டியது.

7 சீட்டுனு சொன்ன உடனே இந்த பேச்சு எல்லாம் மறந்து போச்சு?

---------------------------------------------------------------------------------------------------------------------

கட்சி காணாமல் போய் கற்பூரமாய் காற்றில் மறைந்து போச்சு.
இருக்கற் கொஞ்ச நஞ்ச ஆளுங்கள காப்பாத்த பல்டி அடிச்சு
அடிச்சு வெட்கம், மானம், ரோஷம் எல்லாத்தையும் விட்டுட்டு
சிரிச்சுக்கிட்டு நிக்கறாரு.

இதுக்கு மேல அசிங்கப்படுத்தினாலும் அவருக்கு உரைக்காது.
போய் மத்த வேலையை பாருங்க
 

15 comments:

  1. வைகோவை குறை கூறும் தகுதி 2 தொகுதிகள்ளுக்கு ஜெயலலிதாவிடம் பிச்சை எடுத்த கம்முனிச்ட்களுக்கு இல்லை
    நிமலன் சென்னை

    ReplyDelete
  2. Are you congress Jalre? over sound. Vaiko choose best one.

    ReplyDelete
  3. திரு விமலன், அரசியல் ஆதாயத்திற்காக கம்யூனிஸ்டுகள் தங்கள் கொள்கைகளை என்றும் மாற்றிக் கொண்டதில்லை. தேர்தல் உடன்பாடு ஏற்படவில்லை என்றதும் நாங்கள் கம்பீரமாக வெளி வந்து விட்டோம். ஆனால் பெரியாரின் சீடன் என்று சொல்லிக் கொண்டே பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன ஹெச்.ராஜாவை கட்டித்தழுவிக் கொண்ட வெட்கம் கெட்ட மனிதன் வைகோ. சேது சமுத்திர நாயகன் என்று இந்த லட்சணத்தில் இந்தாளுக்கு ஒரு பட்டம் வேறு.

    ReplyDelete
  4. ஹலொ அனானி, விமலனுக்கான பதில்தான் உனக்கும். காங்கிரஸ் என்ற செத்த பாம்பை எதுக்குய்யா அடிக்கனும்

    ReplyDelete
  5. மதச்சார்பின்மை பற்றிப் பேசியே பிழைப்பு நடத்தும் மற்ற எல்லா அயோக்கியர்களையும் விட மதச்சார்புள்ளவர்கள் என்று கூறுபவர்களையே நம்பலாம் என்று வைகோ நினைத்திருந்தால் அது தவறா. ஒரு காலத்தில் மிகப் பெரிய கட்சியாகக் கருதப்பட்ட நேர்மை மிக்க இடதுசாரிகள்கூட இப்போது காதறுந்த ஊசியாகி விட்டார்கள். வெட்கம், மானம் ரோஷம் விட்டுத்தானே எல்லோரும் அரசியலில் இருக்கிறார்கள்.

    கோபாலன்

    ReplyDelete
  6. உங்களிடம் வந்தவரை நீங்கள் ஆதரிப்பதில் வியப்பில்லை கோபாலன் சார்

    ReplyDelete
  7. ந்ண்பரே, அடைக்கலம் தேடி ஓடிவந்த அயல்நாட்டு வங்கதேச இஸ்லாமியப் பெண்மணியை, மேற்கு வங்கத்திலிருந்த மதச்சார்பற்ற இடதுசாரி அரசு, அதே மதத்தினரின் வன்முறை காரணமாக மாநிலத்தை விட்டே விரட்டிவிட்டார்கள். . இதுதான் அவர்களின் மதச்சார்பின்மையா.

    கோபாலன்

    ReplyDelete
  8. ந்ண்பரே, அடைக்கலம் தேடி ஓடிவந்த அயல்நாட்டு வங்கதேச இஸ்லாமியப் பெண்மணியை, மேற்கு வங்கத்திலிருந்த மதச்சார்பற்ற இடதுசாரி அரசு, அதே மதத்தினரின் வன்முறை காரணமாக மாநிலத்தை விட்டே விரட்டிவிட்டார்கள். . இதுதான் அவர்களின் மதச்சார்பின்மையா.

    கோபாலன்

    ReplyDelete
  9. பாஜகவையும், அதன் இந்துத்துவ கொள்கையையும் எதிர்ப்பதே எனது முதன்மையான கடமை என்று 2004ல் முழங்கியவர்தான் இந்த சைகோ.
    முழுமையான பேட்டியை படிக்க கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.

    http://www.rediff.com/election/2004/may/12einter2.htm

    ReplyDelete
  10. கோபாலன் சார், நீங்க கேள்வி கேட்பீங்க, அதுக்கு நான் பக்கம் பக்கமா பதில் எழுதுவேன். ஆனா அந்த பதிவு பக்கமே வர மாட்டீங்க, இந்த தில்லாலங்கடி வேலையெல்லாம் இனிமே பலிக்காது. காவிக் கூட்டத்துக்கு முஸ்லீம் பெண் மேல என்ன திடீர் அக்கறை? அதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி நிறை மாத கர்ப்பிணி வயத்த சூலத்தால் கிழிச்சு கொன்னீங்களே அதுக்கு பதில் சொல்லுங்க

    ReplyDelete
  11. பாஜகவையும், அதன் இந்துத்துவ கொள்கையையும் எதிர்ப்பதே எனது முதன்மையான கடமை என்று 2004ல் முழங்கியவர்தான் இந்த சைகோ.
    முழுமையான பேட்டியை படிக்க கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.

    http://www.rediff.com/election/2004/may/12einter2.htm

    ReplyDelete
  12. //நிறை மாத கர்ப்பிணி வயத்த சூலத்தால் கிழிச்சு கொன்னீங்களே அதுக்கு பதில் சொல்லுங்க //

    How long are you going to believe this lie?
    Search google and you will know it is a blatant lie.
    No such event happened.
    Do not spread or believe in rumors.

    ReplyDelete
  13. Anonymous, You dont have the courage to make your comment with your identity because you know this is a fact and the saffron brigade dont have any answer for this brutality

    ReplyDelete
  14. நீங்க கம்மூனிஸ்ட்ட்டா..... ?

    ReplyDelete
  15. ராவணன் - கம்யூனிஸ்ட் என்று சொல்லுங்கள்,

    ReplyDelete