Saturday, March 29, 2014

முதல்வர் அலுவலகத்து கிரிமினல்கள்

கேரள முதலமைச்சரின் அலுவலகத்தில் கிரிமினல்கள் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

கொச்சி, மார்ச் 28-
கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டியின் முன்னாள் மெய்க்காப்பாளர் சலீம்ராஜ் சம்பந்தப்பட்ட நிலமோசடி வழக்கு கள் குறித்து மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) விசாரணை நடத்த வேண்டும் என்று கேரளஉயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. 

இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி ஹரூண் அல் ரஷீத், முதலமைச்சரின் அலுவலகத்தையும் கடுமையாக விமர் சித்தார். “முதலமைச்சரின் தனி அலுவலகத்தில் கிரிமினல்கள் நியமிக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் முன்னுதாரணமாக செயல்பட வேண்டிய அலுவலகமே இப்படி ஆகிவிட்டது. 

அங்கு கிரிமினல்கள் வேலைக்கு நியமனம்செய்யப்பட்டார்கள். எதையும் செய்யத் தயங்காத சிலர் அங்கு வேலைசெய்தார்கள். சரிதா விவகாரம் மற்றும் சூரிய மின்சார மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களும் அங்கு வேலை செய்தார்கள். இது அதிர்ச்சி அளிப்பதும் ஆச்சரி யப்படத்தக்கதுமாகும். இது பற்றி பல்வேறு கட்டங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும் முதலமைச்சர் எந்த பதிலும்சொல்லவில்லை. வருவாய்த் துறை அதிகாரிகளும் கூடசம்பந்தப்பட்ட வழக்காகும் இது. 

பல கோடி ரூபாய் விலை மதிக்கத்தக்க பெருமளவிலான நிலம் சம்பந்தப்பட்டுள்ளது. நிலமோசடி கும்பலின் தலைவராக சலீம்ராஜன் செயல்பட் டுள்ளார். அரசுக்கு தலைமை தாங்குகின்றவர்கள் தலையிட்டுள்ள இவ்வழக்கை மாநில போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே வழக்கை சிபிஐக்கு விடுகிறோம்” என்று நீதிபதி ஹரூண் அல் ரஷீத் தனது தீர்ப்பில் கூறினார். இவ்வழக்குகள் குறித்து ஒன்பது மாதங்களுக்குள் விசா ரணை நடத்தி முடிக்க வேண்டும். அனைத்து விபரங்களும் ஆபரணங்களும் சிபிஐ அதிகாரி களிடம் ஒப்படைக்க வேண் டும் என்று நீதிமன்றம் உத்தர விட்டது.

உம்மன்சாண்டி ராஜினாமா செய்ய வேண்டும் :பினராயி விஜயன் : இதுபற்றி கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினராயி விஜயன், இனியாவது முதலமைச்சர் உம்மன்சாண்டி அதிகார ஆசனத்திலிருந்து இறங்க வேண்டும். எவ்வளவோ நாட்களுக்கு முன்பே கேரளம் இவ்விஷயங்களையெல்லாம் நன்கு அறிந்துள்ளது.
எனினும் கூச்சநாச்சமின்றி பதவி நாற்காலியை விடாமல் தொற்றிக் கொண்டிருக்கிறார் உம்மன் சாண்டி. ஏற்கனவே அவர் பதவிவிலகியிருக்க வேண்டும் என் றார். 

எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறுகையில், இதற்கு முன்பும் முதலமைச்சர் உம்மன்சாண்டியை நீதிமன்றம் விமர்சித்துள்ளது. எனினும் முதலமைச்சருக்கு சிறிதும் வெட்க மில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு முதலமைச்சரின் கன்னத்தில் விழுந்த அறையாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கொடியேரி பால கிருஷ்ணன் கூறினார். 




முதலமைச்சர் உம்மன்சாண்டியுடன் குடைப்பிடித்து செல்கிறார் குற்றவாளி சலீம்ராஜ் (கோப்பு படம்)

நன்றி - தீக்கதிர் 29.03.2014

No comments:

Post a Comment