Friday, March 21, 2014

ஹூகும் சிங்தான் மோடியின் உண்மையான முகம் என்பதை வைகோ அறிவாரா?




மோடியின் நம்பிக்கைக்குரிய கையாள், குஜராத் கலவர நாயகன் அமித் ஷா உத்தரப் பிரதேசத்திற்கு சென்றதன் உடனடி விளைவாக முசாபர்நகர் கலவரங்கள் வெடித்தது. அந்த கலவரங்களில் குற்றம் சுமத்தப் பட்ட சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய மக்களவை வேட்பாளருமான ஹூகும் சிங், கலவரத்தில் பாதிக்கப்பட்டு சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அச்சத்தில் அகதிகள் முகாமில் வாழ்பவர்கள் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.

ஷாம்லி மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. அவர்கள் அனைவரும் அரசு நிலங்களில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். சொந்த இடத்தைவிட்டு வேறு இடத்தில் தங்கியுள்ள அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியிலிருந்து நீக்கப்படவில்லை. அவர்களை ஒருபோதும் தான் நேரில் சந்திக்கப்போவதில்லை என்று பேசியுள்ளார்.

இவங்களே துரத்தி விடுவாங்க, மறுபடியும் வர முடியாம மிரட்டுவாங்க, வோட்டும் போடக்கூடாதாம்.

இதுதான் பாஜகவின் உண்மையான முகம்.
இதுதான் நரேந்திர மோடியின் உண்மையான முகம்.

தேர்தலுக்காகக் கூட சிறுபான்மை சமூகத்தை சந்திக்க மாட்டேன் என்று மத வெறி தோய்ந்த ஆணவத்தோடு பேசுகிற வெறி முகம். சங் பரிவார முகம்.

இந்த வெறி பிடித்த முகத்தைத்தான் பிரதமராக்கத்தான் இனி வரும் நாட்களில் பெரியாரின் சீடன் வைகோ கறுப்புத்துண்டை இழுத்து இழுத்து நா தழுதழுக்க, கண்ணீர் மல்க, உணர்ச்சி கொப்பளிக்க ஆவேசத்துடன் தேர்தல் மேடைகளில் நாடகம் நிகழ்த்தப் போகிறார்.

No comments:

Post a Comment