Friday, March 7, 2014

சுஷ்மாஜீ, யெடீயூரப்பா எப்ப உத்தமரானாரு?





சுரங்க ஊழல் புகழ் ரெட்டி சகோதரர்களின் கட்சியை பாரதீய ஜனதா கட்சியில் சேர்க்கக்கூடாது என்று போர்க்கொடி உயர்த்தியுள்ள திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் கொள்கை உறுதிபாடு மெய்சிலிர்க்க வைக்கிறது. ஊழல் பேர்வழிகளுக்கு கட்சியில் இடம் கிடையாது என்பதை அக்கட்சியின் மற்ற தலைவர்களோ இல்லை கர்னாடக பிரிவோ மதிக்கவில்லை என்பது வேறு விஷயம்.

ஆனால் ரெட்டி சகோதரர்கள் கொள்ளையடிக்க வழி வகுத்த, அந்த கொள்ளையில் குளிர் காய்ந்த யெடீயூரப்பாவின் கட்சியை பாஜகவில் இணைத்தபோது சுஷ்மாஜீ என்ன செய்து கொண்டிருந்தார்? இல்லை அவர் மீது என்று கமண்டலத்திலிருந்து  கங்கை நீர் ஊற்றி அவரை மட்டும் உத்தமராக மாற்றி விட்டார்களா?

ஏன் இந்த புனிதர் வேடம்?

இன்னொரு கேள்வியும் இருக்கு, பிறகு வரேன்.

1 comment: