Saturday, March 22, 2014

சிதம்பரம் அண்ணாச்சி இப்படி ஏமாத்திட்டீங்களே?




இன்சூரன்ஸ் ஊழியர்களின் முதல் பெரும் எதிரி நமது சிவகங்கைச் சீமான் ப.சிதம்பரம்தான். லாபகரமாக செயல்படும் எல்.ஐ.சி, ஜி.ஐ.சி நிறுவனங்களை சீரழித்து பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்திய இன்சூரன்ஸ் துறையை மாற்ற வேண்டும் என்று துடித்த மகானுபாவன் இந்த மனிதன்தான்.

மதுரைக் கோட்டத்தின் மாநாடு கடந்த வருடம் நடைபெற்ற போது சிவகங்கைத் தொகுதியில் சிதம்பரம் போட்டியிட்டால் அவரை தோற்கடிக்க களம் இறங்குவது என அக்கோட்டத் தோழர்கள் சபதமிட்டனர்.

அதன் பின்பு அண்ணாச்சி புதுச்சேரி தொகுதிக்கு மாறப் போவதாக தகவல்கள் வந்தன. புதுச்சேரி எங்கள் வேலூர் கோட்டத்திற்கு உட்பட்ட தொகுதி. அப்படி அவர் புதுச்சேரியில் போட்டியிட்டால் அங்கே அவரை தோற்கடிக்க நாம் களம் புகுவோம் என்று எங்கள் கோட்ட மாநாட்டில் முடிவெடுத்தோம்.

ஆனால் சிதம்பரம் அண்ணாச்சியோ மதுரைக் கோட்டத் தோழர்களுக்கும் வேலை வைக்காமல், எங்கள் கோட்டத் தோழர்களுக்கும் வேலை வைக்காமல் அவரே தேர்தல் களத்திலிருந்து புறமுதுகு காட்டி ஓடிப் போய் எங்களையெல்லாம் ஏமாற்றி விட்டார்.

சிதம்பரம் அண்ணாச்சி இதெல்லாம் போங்கு ஆட்டம்.

நீங்க வரனும், நிக்கனும், நாங்கதான் உங்களை தோக்கடிக்கனும்.

2 comments:

  1. Thambi 18 yedathula deposit kaliyakirathu paththatha ?

    ReplyDelete
  2. முகம் காட்டவே தைரியமில்லாத தொடை நடுங்கி, வெட்கம், மானம், ரோஷம் இல்லாத கோழை, எவ்வளவு திட்டினாலும் சொரணையே இல்லாமல் அனானியாவே இருக்கிற எருமை மாடு, நாங்க டெபாசிட் வாங்கறோ, வாங்கல அது எங்க பிரச்சினை. சொந்த பெயரில வரமுடியாத வெக்கம் கெட்ட ஜென்மத்துக்கு ஒரு கம்ப்யூட்டர், அதுல இன்டெர்னெட் வேற, ஓடிப் போ

    ReplyDelete