Sunday, November 3, 2013

ஏக்கமே ஊற்றாக



மேகம் கருத்திருந்தது.
சூரியன் எங்கோ மறைய
பூமியில் மெல்ல மெல்ல
இருள் சேர்ந்தது.
காற்றில் கொஞ்சம்
குளிரும் இணைய,
தேடி எடுத்து
குடையோடு வெளியே வந்தேன்.
மந்திரவாதியின் மாயம் போல
அனைத்தும் மறைந்திருக்க
வானின் வெளுப்பு போல
மனதிலும் ஏதோ வெறுமை.மட்டுமே.
மழையில்லா ஏக்கம்
இன்னும் எத்தனை
கவிதைகளுக்கு  ஊற்றாகும்?

2 comments:

  1. கவிதையின் கருவும்
    சொல்லிச் சென்றவிதமும்
    மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி திரு ரமணி. மழையில் நனையும் அனுபவத்தை கவிதையாக எழுதும் வாய்ப்பு எப்போது வரப் போகிறதோ?

    ReplyDelete