Sunday, November 24, 2013

எனைக் காணாமல் ஏமாந்த.......

ஜன்னலோரத்தில் மோதிய காற்று
ஜாடையாய் சொல்லியது,
ஊர் வந்து இறங்கியதும்
ஈரத்தில் நனைந்த சாலை
ஆமாமென்று ஆமோதித்தது.
இரண்டு நாளாய் வந்திருந்தும்
எனைக் காணாமல்
ஏமாந்து போயிருக்குமோ
எங்களூருக்கு வந்த மழை?

No comments:

Post a Comment