Thursday, November 7, 2013

கட்டுக்கடங்காத கோபம் எனக்கு

எனக்கு  உன்  மேல் கோபம்,
கட்டுக்கடங்காத கோபம்,
வருவதாய் ஆசை காட்டி
வராமல் ஏமாற்றுகிறாய்.
வந்தாலும் கூட
வந்த வேகத்திலேயே
மறைந்து போகிறாய்.

மண்ணை குளிர வைப்பாய்,
மக்களை வாழ வைப்பாய்,
தாகம் தீர்த்து வைப்பாய்.
ஆவலோடு காத்திருந்தால்
மீண்டும் மீண்டும்
ஏங்க வைக்கிறாய்.

இனி  உன்னை பாட
என் கைகள் உயராது.
வான் மழையே, உன் புகழ்
பாடும் ஒரு கவிஞனை
இழந்தாய் நீ! 

 

No comments:

Post a Comment