Wednesday, March 12, 2025

பாம்பிற்கு பால் வார்க்கும் திமுக

 


"மாற்றோரும் போற்றும்" என்ற தலைப்பில் தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன் முதல்வரின் பிறந்த நாள் விழா கூட்டம் நடத்தியுள்ளார். 

இன்றைய மாநில அரசுக்கு எதிரான கட்டுக்கதைகளை தீவிரமாக பரப்பி வரும் சங்கி ரங்கராஜ் பாண்டேவை அந்த விழாவில் பேச அமைச்சர் அழைத்துள்ளார்.

தான் செய்வது என்னவென்று அறிந்து செய்தாரா என்று தெரியவில்லை. ஒரு நச்சுப்பாம்புக்கு தன் மேடையில் இடம் கொடுத்தால் அது அங்கேயும் நச்சைத்தான் கக்கும் என்ற புரிதல் கூட இல்லையா அல்லது அவருக்கு பாண்டே மூலம் ஏதேனும் டீலிங் உள்ளதா? 

ரங்க்ராஜ் பாண்டேவை அழைத்துப் பேச வைத்தால் அவர் திமுக மீது கடுமை காண்பிக்க மாட்டார் என்று தப்புக் கணக்கு போட்டிருந்தால் அதை விட மூடத்தனம் ஏதுமில்லை.

இன்று மட்டும் பாண்டே, சாணக்யா ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவுகளில் சில . . .




இது மட்டுமா, சாண்க்யாவின் ஆண்டு விழாவிற்கு அழைக்கப்பட்டவர்கள் யாரென்று பாருங்கள்.



அனைவருமே திமுகவிற்கு எதிரானவர்கள். நீங்கள் அவரை அழைத்தீர்கள். அவர் உங்களை கண்டுகொள்ளவில்லை. அந்த விழாவே உங்களுக்கு எதிராகத்தான் இருக்கும்.

இதெல்லாம் முதல்வருக்கு தெரியுமா?

திமுகவில் வளர்ந்துள்ள களைகளை நீக்காவிட்டால் அது 2026 ஐ வெகுவாக அழித்து விடும். 






2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete