Wednesday, March 19, 2025

இளையராஜா-மோடி-மு.க.ஸ்டாலின்

 


நேற்று இளையராஜா, மோடியை சந்தித்துள்ளார். அதனை தமிழ்நாடு பாஜகவும் மற்ற சங்கிகளும் எப்படி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்கள் என்று பாருங்கள். . .


மோடியே இளையராஜாவை அழைத்து பாராட்டினார் என்று சொல்கிறார்கள். 

இந்த சந்திப்பு குறித்து மோடியும் ட்விட்டரில் பதிவு போடுகிறார்.


தான் அழைத்து இளையராஜா வந்ததாக மோடி எங்கேயும் சொல்லவில்லை. 

இளையராஜாவும் ஒரு பதிவு போட்டுள்ளார்.


மோடி அழைத்துச் சென்றதாக அவரும் சொல்லவில்லை.

இதில் என்ன டெக்னிகாலிட்டி இருக்கிறது என்று தோன்றலாம்.

சிம்பனிக்கு முன்பாக முதல்வர் இளையராஜாவை சந்தித்தது தொடர்பாக அவர் ஒரு பதிவு போட்டுள்ளார்.


முதல்வர் "நேரில் வந்து" வாழ்த்தினார் என்பதை அதில் அவர் பதிவு செய்துள்ளார். தொல்.திருமா, செல்வப்பெருந்தகை, ஜி.கே.வாசன், ஆட்டுக்காரன் ஆகியோர் அவரை வந்து சந்தித்தார்கள் என்பதையும் அவர் பதிவு செய்திருந்தார்.

சிம்பனிக்கு பிறகு மோடியை சந்தித்ததை பதிவு செய்த இளையராஜா, சிம்பனி முடிந்து சென்னை வந்த பின்பு அவர் சென்று முதல்வரை பார்த்ததை மட்டும் பதிவு செய்யவில்லை. ஆனால் முதல்வர் முன்பும் பதிவு செய்திருந்தார். இப்போதும் பதிவு செய்துள்ளார்.


இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை தமிழ்நாடு அரசு கொண்டாடும் என்ற முக்கிய செய்தியை இளையராஜா பதிவு செய்யாதது ஏனோ?

முதல்வரை நேரில் சென்று சந்தித்தது தெரிந்தால் மோடி கோபப்படுவார் என்ற அச்சமோ!

இளையராஜாவின் இசை இணையற்றதுதான். ஆனால் அவர் அரசியல்?

இதற்கிடையில் மோடி அழைத்து பாராட்டினார் என்று சங்கிகள் ஏன் வெட்டி விளம்பரம் செய்கிறார்கள்! மானங்கெட்டவர்கள்!

No comments:

Post a Comment