மேலேயுள்ள கட்டுப்பாடு வரவேற்கத்தக்கது. இதனை சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுதும், ஏன் இந்தியா முழுதும் கூட விரிவுபடுத்த வேண்டும்.
வளர்ப்பு நாய்களை விட தீவிரமான பிரச்சினை தெரு நாய்கள். தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையையும் எந்த அரசும் இது வரை எடுக்கவில்லை. எடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.
ஆனால் கட்டுப்படுத்த இன்னொரு விஷயம் இருக்கிறது.
தெரு நாய்களை ஊக்குவிக்கும் பலர் இருக்கிறார்கள். தொழு நோயாளிகளுக்கு சேவை செய்ய வாழ்க்கையை அர்ப்பணித்த அன்னை தெரசா =வின் மறு பிறப்பு என்ற நினைப்பில் சிலர் பத்து ரூபாய் பிஸ்கெட் பாக்கெட்டை இருபது நாய்களுக்கு பிரித்து போடுகிறார்கள்.
அவர்கள் போடும் துண்டு பிஸ்கெட்டை சாப்பிடும் நாய்கள் அடுத்து அந்த தெருவில் செல்பவர்களை துரத்த ஆரம்பிக்கின்றன.
அப்படி தெரு நாய்களின் மீது கருணை உள்ளவர்கள், நடுத்தெருவில் தெருநாய்களுக்கு பிஸ்கெட் போடுவதற்கு பதிலாக அவர்களது வீட்டில் வைத்து வளர்க்கலாமே!
தெரு நாய்களைத்தான் கட்டுப்படுத்த முடியவில்லை, தெரு நாய்களை ஊக்குவிப்பவர்கள் மீதாவது கட்டுப்பாடு கொண்டு வரலாமே!
Your postings is appreciated. The suggestions put forth by you may be taken by government of TN without ego.
ReplyDelete