Monday, March 10, 2025

பெருமையில்லை, ஆணவம், திமிர்


 நேற்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றுள்ளது. 

அது தொடர்பாக சங்கிகள் பலரும் பகிர்ந்து கொண்டுள்ளது கீழே உள்ளது. 

கடந்த ஆண்டு இந்தியா நடத்திய உலகக் கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தான் இந்தியா வந்தது. அதிலும் முதல் போட்டி மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. குஜராத் சங்கிகள் பாகிஸ்தான் வீரர்களை வெறுப்பேற்ற கீழ்த்தரமாக நடந்து கொண்டதையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இப்போது பாகிஸ்தான் நடத்தும் போட்டியில் விளையாட இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுக்கிறது. அதனை கண்டிக்க யாரும் தயாரில்லை, பாகிஸ்தான் உட்பட. பல நாடுகள் பாகிஸ்தானிலிருந்து துபாய் வந்து இந்தியாவோடு விளையாடி விட்டு சென்றன.

சேர்த்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தைக் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை ஆட்டி வைப்பது பல ஆண்டுகளாக நடக்கும் கதை. போதாக்குறைக்கு  கிரிமினல் ஷா மகன் ஜெய்ஷா இப்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்.

அதனால் இந்தியா என்ன அராஜகம் செய்தாலும் எல்லா நாடுகளும் அமைதியாகத்தான் இருக்கும்.

இந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாமல் இருந்தது என்பது பெருமைக்குரிய விஷயம் இல்லை. ஆணவம், திமிர். அவ்வளவுதான்.

 ஒரிஜினலாக இவர்கள் பீற்றிக் கொண்ட துல்லிய தாக்குதலே ஒரு ஏமாற்று வேலை என்கிற போது, இந்த திமிரை துல்லிய தாக்குதல் என்று வர்ணிப்பது அசிங்கத்தின் உச்சம். 

No comments:

Post a Comment