Friday, March 21, 2025

நேற்று நாக்பூர், இன்று அலகாபாத்


அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி கொடுத்த தீர்ப்பு கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.


இப்படி ஒரு கேவலமான தீர்ப்பை ஒரு நீதிபதி அளிக்கிறார் என்றால் அவர் நிச்சயம் சங்கியாக மட்டுமே இருக்க முடியும். பெண்களை வெறும் போகப் பொருளாக அவர்கள் மட்டும்தான் பார்ப்பார்கள்.

இது போன்ற தீர்ப்பு இதற்கு முன்பாக வந்துள்ளது.

காவிகளின் தலைமையகம் நாக்பூரில் அமைந்துள்ள பம்பாய் உயர்நீதி மன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் ஒரு நீதிபதி இது போன்றதொரு தீர்ப்பை அளிக்க அதனை உச்ச நீதிமன்றம் அகற்றி விட்டது, அபத்தமான தீர்ப்பு என்று கண்டித்து அந்த நீதிபதி நிரந்தர நீதிபதியாவதையும் ரத்து செய்து விட்டது.

இந்த மனிதனை நீதிபதி பதவியிலிருந்து நீக்குவதுதான் சரியாக இருக்கும்.

முந்தைய வழக்கு பற்றி அப்போது எழுதப்பட்ட பதிவு கீழே உள்ளது.


அபத்தமான தீர்ப்பு அகற்றப்பட்டது

 19, நவம்பர், 2021


கடந்தாண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை ஒரு அபத்தமான  தீர்ப்பை அளித்தது.

 ஒரு சிறுமியை ஒரு கிழவன் பாலியல் சீண்டல் செய்தான் என்று போக்ஸோ சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில்

 அந்த சிறுமி ஆடைகள் அணிந்திருந்ததால், நேரடியான தொடுதல்  இல்லாத காரணத்தால் வழக்கை தள்ளுபடி செய்தார் ஒரு பெண் நீதிபதி. 

 நல்ல வேளையாக அந்த தீர்ப்பிற்கு தடை விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தற்காலிக நீதிபதியாக இருந்த அந்த அம்மையாரை நிரந்தர  நீதிபதியாக்காமல் பதவியிலிருந்து அகற்றினர்.

 நேற்று உச்ச நீதிமன்றம் நாக்பூர் தீர்ப்பை ரத்து செய்துள்ளது. அது  அபத்தமான ஒன்று என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 "ஆடைகள் இருந்ததா, நேரடி தொடுதல் இருந்ததா இல்லையா என்பதெல்லாம் முக்கியமே இல்லை, பாலியல் சீண்டல் நோக்கம்   இருந்ததா என்பது மட்டுமே முக்கியம்"

 என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

 குற்றவாளிகள் சட்டத்தின் குறைபாடுகளை பயன்படுத்தி தப்பிக்க அனுமதிக்கப் படக் கூடாது.  



No comments:

Post a Comment