காதலன்
வில்லன் காகர்லா சத்யநாராயணா, தன்னால் கொல்லப்பட்டவர்களுக்கு காசியில் தர்ப்பணம் கொடுக்கும் காட்சியை வைத்து மோடியும்
இது போல யாருக்கு தர்ப்பணம் கொடுத்திருப்பார் என்று சில நாட்கள் முன்பு கேட்டிருந்தேன்.
யாருக்கு தர்ப்பணம் செய்தீர் மோடி ? என்ற பதிவின் இணைப்பு இது . . .
இப்போது
ஆரெஸெஸ் ரெவியே காசியில் குளிக்கும் காட்சியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பார்த்தேன்.
காகர்லா
சத்யநாராயணாவுக்கு கொஞ்சமும் சளைக்காத கிரிமினல் ஆரேஸெஸ்.ரெவி. இப்போது தமிழ்நாட்டின்
சட்டம் ஒழுங்கு நிலையை சீர்குலைக்கும் வகையில் பல கொலை, பாலியல் கொடுமைகள் நிகழ்ந்து
கொண்டிருக்கிறது. 356 பிரிவை பயன்படுத்தி தமிழ்நாட்டு
அரசை கலைக்க வேண்டும் என்று வேறு சங்கிகள் பேசத் தொடங்கி விட்டனர்.
அதனால்
அதற்கு உதவ ரெவியே பல கிரிமினல் செயல்களை தூண்டி விட்டு அதற்கான பிராயசித்தமாக காசியில்
தர்ப்பணம் செய்தாரோ என்று டவுட் வருகிறது. கொன்றால் பாவம், தின்றால் போச்சு என்று ஒரு
சொலவடை இருப்பது நமக்கு தெரியும். கிரிமினல் வேலைகளை செய்து விட்டு தர்ப்பணம் செய்தால்
அந்த பாவம் போய் விடும் என்று சனாதன தர்மத்தில் சொல்லியிருக்கிறதோ என்னவோ!
பிகு:
ஒரு வாரம் முன்னாடி எழுதின பதிவு.
No comments:
Post a Comment