நேற்று தமிழக அரசு எடுத்த மிக முக்கியமான முடிவு இது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை அங்கிருந்து மாற்ற காரணம் கீழே உள்ளது.
பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக பொறுப்பற்ற முறையில் பேசிய ஆட்சியரை பணி இடை நீக்கமே செய்திருக்க வேண்டும். சரி இது பரவாயில்லை.
ஆனால் இது போதுமா?
மாநில அரசு நிர்வாகத்தில் ஏராளமான காவி ஆடுகள் ஊடுறுவியுள்ளன. திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர், எஸ்,பி, சென்னை காவல்துறை அனுமதி கொடுத்த மாதர் சங்கப் பேரணிக்கு திண்டுக்கல் மாவட்டச் செயலாளரை செல்ல விடாமல் தடுத்து எம்.பி யின் காரையும் தடுத்த திண்டுக்கல் எஸ்.பி என பெரிய பட்டியலே உள்ளது.
அவர்களையும் களை எடுக்காவிட்டால் தமிழ்கத்தின் அமைதி வயல்களை அந்த காவியாடுகள் தின்று தீர்த்து விடும்.
No comments:
Post a Comment