Sunday, April 24, 2022

வெள்ளைத்துணி முன்னேற்றம்

 


கொரோனாவுக்கு முன்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குஜராத் வந்த போது அவர் கண்ணில் படக் கூடாது என்பதற்காக குடிசைப் பகுதிகளை சுவர் கட்டி மறைத்தார்கள்.

இப்போது இங்கிலாந்து பிரதம மந்திரி போரீஸ் ஜான்சன் வந்த போது வெள்ளைத்துணி கட்டி மறைத்துள்ளார்கள்.

சுவர் கட்ட இப்போது காசு கிடையாதா?

அல்லது

எதற்கு தேவையில்லாமல் சுவருக்கு செலவு செய்ய வேண்டுமென்று வெள்ளைத்துணி கட்டினார்களா?

கடந்த முறை ட்ரம்பிற்காக நூறு கோடி செலவு செய்தார்கள். அதிலே பூ அலங்காரத்துக்காக மட்டும் செய்த ஊதாரித்தனம் மூனே முக்கால் கோடி.

அதையெல்லாம் மக்களுக்காக செலவு செய்திருந்தால் இப்போது வெள்ளைத்துணி போட்டு மறைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

வெள்ளைத்துணி மறைத்தது குடிசைகளை மட்டுமல்ல . . .

குஜராத் மாடல் என்று ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு பிம்பம் என்ற உண்மையையும் கூட.


No comments:

Post a Comment