Thursday, April 14, 2022

அண்ணல் அம்பேத்கரை கொண்டாடும் வேளையில்

 


இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள். ஒன்றிய அரசு இன்று அரசு விடுமுறை அளித்துள்ளது.

அண்ணல் அம்பேத்கரை நாம் கொண்டாடும் வேளையில் முக்கியமான ஒரு விஷயத்தை மறந்து விடக் கூடாது.

இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி என்று நாம் அவரை போற்றுகிறோம். அந்த அரசியல் சாசனத்திற்கு இன்று ஏற்பட்டுள்ள ஆபத்தை மறந்து விடக் கூடாது.

அரசியல் சாசனம் உறுதியளித்துள்ள அடிப்படை உரிமைகள் எல்லாம் இன்றைய ஆட்சியாளர்களால் தாக்கப்படுகிறது. கருத்துரிமை தொடங்கி உணவு உரிமை உட்பட பலவும் கைநழுவிக் கொண்டிருக்கிறது.

அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கான இயக்கங்களில் பங்கேற்பதுதான் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அர்த்தம் கிடைக்கும்.

 

No comments:

Post a Comment