Tuesday, April 12, 2022

காஷ்மீர் பற்றி பேசாதீர் . . .

 


பாகிஸ்தானில் புதிய பிரதம மந்திரியாக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளார். பழைய பெருச்சாளி நவாஸ் ஷெரீபின் தம்பி.

நாடாளுமன்றத்தில் முதல் உரையில் காஷ்மீர் பற்றியும் இந்திய அடக்குமுறைகள் குறித்தும் 370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்பு பாகிஸ்தான் அரசு ஏதும் செய்யவில்லை என்றெல்லாம் பேசியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக கம்பு சுற்றினால்தான் பாகிஸ்தான் அரசியலில் குப்பை கொட்ட முடியும். அதைத்தான் இந்த புதுப் பெருச்சாளியும் செய்துள்ளார்.

ஆனால் இவர்கள் எல்லாம் ஒரு விஷயத்தை யோசிப்பதே இல்லை.

"இங்க அடிச்சா அங்க வலிக்கும்" என்பது போல இவர்கள் பேச பேச அதெல்லாம் இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்களைத் தான் பாதிக்கும். இப்போது ஏற்கனவே இஸ்லாமியர்கள் அச்ச உணர்வோடு வாழும் துரதிர்ஷ்டமான நிலையை  இன்றைய வெறி பிடித்த ஆட்சியாளர்களும் அவர்களின்  குண்டர்களும் உருவாக்கியுள்ளனர். 

பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் இது வரை காஷ்மீர் மக்களுக்கு எந்த நல்லதும் செய்ய முடிந்ததில்லை. இனிமேலும் ஏதும் முடியாது.

உங்களால் முடிந்த ஒரே நல்ல காரியம்.

காஷ்மீர் பற்றி நீங்கள் பேசாமல் இருப்பதுதான். 

அந்த மக்கள் எந்த சவாலையும் சந்திப்பார்கள்.


No comments:

Post a Comment