Monday, April 25, 2022

சங்கிகளா, இதுதாண்டா இந்தியா

 


ஜஹாங்கிர்புரி - காவிக்கயவர்களும் காக்கி அரக்கர்களும் இணைந்து வெறியாட்டம் நடத்திய பகுதி.

இஸ்லாமியர்களின் வீடுகளையும் கடைகளையும் இடித்துத் தள்ளினார்கள் மோடியின் அடியாட்கள்.

பகைமைத்தீயை பரவ விட்ட கொடியவர்களுக்கு அப்பகுதி மக்கள் தக்க பதில் சொன்னார்கள்.

நேற்று அங்கே அமைதி யாத்திரை நடந்துள்ளது. இஸ்லாமியர்களும் இந்துக்களும் கரம் கோர்த்து இந்தியாவின் கொடியை கையிலேந்தி "இந்து முஸ்லீம் ஒற்றுமையை பாதுகாப்போம், பாரத் மாதா கீ ஜெய்" என்ற முழக்கங்களோடு நடந்துள்ளது. 

பாரத் மாதா கீ ஜெய் என்று இங்கே வந்த முழக்கம் யாரும் கட்டாயப்படுத்தி வந்ததில்லை. தானாக வந்த முழக்கம். வங்க தேசத்து அகதிகள், மியன்மர் ரோஹிங்யா அகதிகள் என்ற கட்டுக்கதைகள் இங்கே நொறுங்கிப் போய் விட்டது. 

இந்தியா என்பது பன்முகத்தன்மையுள்ள நாடு. அதை மாற்ற மோடி போன்ற எந்த கொம்பனாலும் முடியாது என்பதை பாதிக்கப்பட்ட மக்களே, தங்கள் வலிகளை மறந்து காயங்களுக்கு ஒற்றுமை எனும் மருந்தை தடவிக் கொண்டுள்ளனர்.

சங்கிகளே, இதுதாண்டா இந்தியா.

இந்த இந்தியா உங்களுக்கு உவப்பில்லாத ஒன்றாக இருந்தால் இமாலய மலையிலிருந்து விழுந்தோ, இந்தியப் பெருங்கடலில் மூழ்கியோ இறந்து போய் விடுங்கள்.


No comments:

Post a Comment