Saturday, April 16, 2022

தமிழணங்கில் என்ன பிரச்சினை?

 



ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த தமிழணங்கு ஓவியத்தை சங்கிகள் விமர்சனம் செய்து கொண்டுள்ளார்கள்.

இவர்களின் பிரச்சினை என்ன?

 தமிழணங்கு கருப்பாக தலை விரி கோலமாக இருப்பதா? ஓவியர் தன் கற்பனையை படமாக வரைகிறார். ஆற்றலின் வடிவமாக தமிழணங்கு இருப்பதாக நான் பார்க்கிறேன். யாரும் பார்த்திராத தமிழ்த்தாயின் உருவம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உத்தரவு போடும் அதிகாரம் யாருக்கு உண்டு?

 இவர்கள் பிரச்சினை வேறு.

 அதனை முதன்முதலில் பகிர்ந்து கொண்டது ஏ.ஆர்.ரஹ்மான் என்பதுதான் பிரச்சினை.

 இந்திதான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளின் இளைய கூட்டாளி சொன்னதன் எதிர்வினையாக கருதுவதால் வரும் பிரச்சினை.

 அவர்கள் விமர்சனத்தை புறந்தள்ளி ‘தமிழணங்கை” இந்த வடிவத்திலும் கொண்டாடுவோம்.

No comments:

Post a Comment