Friday, April 15, 2022

தற்கொலைக்கு தூண்டிய மந்திரியின் நேர்மை.

 


கமலேஷ் படீல் பாஜக காரர்தான். ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பல ரௌடி இயக்கங்களில் ஒன்றான ஸ்ரீராம் வாகினியின் கர்னாடக அமைப்பாளர் வேறு. அவர் ஒரு ஓட்டல் விடுதியில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு விஷமறுந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காரணம் என்ன?

ஈஸ்வரப்பா எனும் மந்திரி.

சாலை போடும் ஒப்பந்ததாரரான கமலேஷ் படீலுக்கு நான்கு கோடி ரூபாய் பணம் வர வேண்டியுள்ளது. தனக்கு 15 லட்சம் தந்தால்தான் பில் ரிலீஸ் ஆகும் என்று ஈஸ்வரப்பா வற்புறுத்தியதால் அந்த பணத்தைக் கொடுத்தும் அரசு பில் தொகையை ரிலீஸ் செய்யவில்லை. அதனால் கடன் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதி வைத்துள்ளார்.

பஞ்சத்துக்கு சங்கியான பொம்மை தன் அமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பாரா?

தன் கட்சி உறுப்பினராக இருந்தாலும் லஞ்சம் கேட்பதில் கறாராக இருந்த பிஜேபி மந்திரியின் நேர்மை எனக்கு பிடித்துள்ளது.

No comments:

Post a Comment