Wednesday, April 27, 2022

குடி கெடுக்கும் கூட்டணி

 





மேலே உள்ள படங்கள்  என்னவென்று புரியவில்லையா? 

கீழே உள்ள படம்தான் மேலே உள்ளவையும்.



பெரும் பொய்யன் மாரிதாஸ் ஒரு நச்சுப்பாம்பு. தரகுப்புயல் தமிழருவி மணியனோ ஒரு நரி.

கோட்சேவை கொண்டாடுகிற, மகாத்மா காந்தி படுகொலையை நியாயப்படுத்தும் மாரிதாஸும் காந்திய மக்கள் இயக்கம் என்ற பெயரில் தொழில் நடத்தும் தரகுப்புயலும் இணைந்தால் என்னென்ன நாச வேலைகளை அரங்கேற்றுவார்களோ? கேடு கெட்ட கூட்டணி இது.

தரகுப்புயலை முதன் முதலில் ஒன்பது வருடங்களுக்கு முன்பு கண்டித்து எழுதினேன். 

கீழே அந்த பதிவின் தலைப்பிலேயே இணைப்பை அளித்துள்ளேன்.

தரமிழந்து போன தமிழருவி மணியனுக்கே ஒரு திறந்த மடல்

அந்த  பதிவிற்கு கடுமையான எதிர்வினைகள் வந்தன. ஆனால் காலம் நான் சொன்னதுதான் சரி என்பதை நிரூபித்து விட்டது. (பல சந்தர்ப்பங்களிலும் என் மதிப்பீடு சரியாகத்தான் இருந்துள்ளது. மற்றவர்களுக்குத்தான் புரிந்து கொள்ள கால தாமதமாகிறது) 

(அந்த பதிவை புதுவையிலிருந்து வெளி வந்த "நமது மனசாட்சி" என்ற பத்திரிக்கை பாமரன் என்ற பெயரில் வெளியிட்டதும் ஏனய்யா எனது பெயரை வெளியிடவில்லை என்றதற்கு அந்த டுபாக்கூர் ஆசிரியர் மனசாட்சியில்லாமல் பதில் சொன்னதும் நினைவுக்கு வந்தது)

கடைசியாக தரகுப்புயலுக்கு ஒரு கேள்வி

தகதகன்னு மின்னறீங்களே. புது இடத்தில கவனிப்பு பலமோ!!!!

1 comment:

  1. சரியான தலைப்புகள்...தவறான மனிதர்களுக்கு...விமலா வித்யா

    ReplyDelete