Sunday, April 24, 2022

அளுனரை அவமதித்தால் ஆட்டுக்காரருக்கு?????

 


முதலில் இந்த காணொளியை பார்த்து விடுங்கள்.


விஜேயேந்திர சரஸ்வதி எவ்வளவு அலட்சியமாக தமிழிசையை டீல் செய்கிறார் பாருங்கள்! ஜாதி மேலாதிக்க வெறியும் பெண்ணடிமைத்தன சிந்தனையும் மனு தர்மத்தை போதிப்பவர்களுக்கு இருப்பதில் வியப்பேது!

தமிழ்நாட்டு ஆட்டுத்தாடி மீது நடக்காத தாக்குதலுக்கு கிரிமினல் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதப்போவதாக சொன்ன ஆட்டுக்காரருக்கு தமிழிசைக்கு காஞ்சிபுரத்தில் நடந்த இழிவு பற்றி தெரியுமா? அதை கண்டித்து சங்கர மடம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவாரா?


ஆமாம்.

என்னதான் மூடச்சங்கியாக இருந்தாலும் சங்கர மடத்துக்கு எதிராக பேசி பதவியை இழக்குமளவிற்கு ஆட்டுக்காரன் அறிவற்றவனில்லை.

இன்னொன்றும் சொல்ல வேண்டும்.

தமிழிசை மீதெல்லாம் எனக்கு அனுதாபம் கொஞ்சமும் கிடையாது.

முன்னாள் பிரதமர் என்றாலும் கைம்பெண் என்பதால் இந்திரா அம்மையாரை முதுகுக்குப் பின் நிற்க வைத்தது சங்கர மடம்.

சுப்ரமணியசாமியை நாற்காலியில்  அமர வைத்து பொன்னாரை தரையில் உட்கார வைத்தது சங்கர மடம்.

ஒன்றிய அமைச்சர் எல்.முருகனை கொல்லைப்புறத்தில் புல்லில் உட்கார வைத்ததும் இதே மடம்தான்.

ஆக இது தமிழிசை அவரே தேடிக்கொண்ட இழிவு. அதனால் அவருக்கு அனுதாபம் அவசியமில்லை. 

2 comments:

  1. இதற்க்கு சங்கி கூட்டணி வெளிநடப்பு செயுமா சட்டமாட்றாத்தில் இருந்து

    ReplyDelete
  2. காஞ்சி சங்கர மடத்தை பிற சங்கர மடத்தினர் அங்கீகரிப்பதில்லை . பிராமண அதிகார மையத்தின் ஆணைப்படி பதவியை காப்பாற்ற தமிழிசை பல குற்றச்சாட்டுகள் உள்ள ஜெயேந்திரனை சந்தித்து பிராமண பலத்தை காட்டியிருக்கிறாள் . கட்டுமரத்தின் புதல்வன் கருப்பு பணத்தை காப்பாற்ற பங்காருவை சந்தித்தது போலத்தான் இதுவும்

    ReplyDelete