Thursday, October 12, 2017

ஆனாலும் அந்த ஏழு மொழி அனானியை பாராட்டுகிறேன் . . .





அமித் ஷா குறித்த முந்தைய பதிவிற்கு ஒரு காவி அனாமதேயம் பதினைந்து பின்னூட்டங்கள் போட்டுள்ளார்.

ரமணா பாணியில் சொல்ல வேண்டுமென்றால்

தமிழில் எழுதிய பின்னூட்டங்கள்    6
ஹிந்தியில் எழுதியவை  2
உருதில் எழுதியவை 2
தெலுங்கில் எழுதியவை  1
சீன மொழியில் எழுதியவை  2
(ஒரு வேளை அது ஜப்பானிய மொழியாகக் கூட இருக்கலாம்)
பிரெஞ்சு மொழியில்  ஒன்று  1
தங்கிலிஷில் எழுதியவை 1

தமிழில் எழுதியது ஆபாசத்தின் உச்சகட்டமாக இருக்கிற போது மற்ற மொழிகளில் மட்டும் அந்த அனானி என்ன நாகரீகமாகவா எழுதியிருக்கப் போகிறார்?

அந்த அனானி, எப்போதுமே பெண்களின் உறுப்புக்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் காம வெறி பிடித்த மிருகம் என்று நினைக்கிறேன். இப்படி இருப்பதால்தான்  பாலியல் வன் கொடுமைக் குற்றங்களில் அதிகம் சிக்குவது பாஜக ஆட்களாக இருக்கிறார்கள். பாஜக ஆட்கள் கொல்லப்படுவதற்கு முறையற்ற உறவுகள் காரணமாக இருக்கிறது.

மிஸ்டர் அனானி, உங்களுடைய தாயுடைய, மனைவியுடைய, சகோதரிகள், மகள் இருந்தால் மகள்,  ஆகியோரின் மின்னஞ்சல் முகவரியை கொஞ்சம் அனுப்பி வையுங்களேன். நீங்கள் போட்ட பின்னூட்டங்களை அவர்களுக்கு கொஞ்சம் அனுப்பி வைக்கிறேன். எப்பேற்பட்ட உயர்ந்த மனிதனோடு வாழ்கிறோம்  என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா? உங்களுக்கு உறவினராக இருப்பது அவர்கள் வாழ்வின் பெருந்துயரம். உங்கள் மகள் கூட உங்களை விட்டு விலகி  நிற்க வேண்டும். அவ்வளவு கீழ்த்தரமான மனிதர் நீங்கள்.

பாஜகவின் மாநிலத்தலைவர் தமிழிசைக்கும் அனுப்பலாமா என்று யோசிக்கிறேன். பாஜக ஆட்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பது அவருக்கும் தெரியும் என்றாலும் கூட.

ஆனாலும் அந்த அனானியைப் பாராட்டுகிறேன். தன்னுடைய எந்த ஒரு பின்னூட்டமும் பிரசுரிக்கப்படாது என்று தெரிந்தும் ஏழு மொழிகளில் பின்னூட்டம் எழுத அவர் மேற்கொண்ட முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பாஜகவில் யார் இருக்க முடியும் என்று பல முறை நான் சொன்னதை அந்த அனாமதேயம் நிரூபித்துள்ளார். அதற்காகவும் அவருக்கு நன்றி.

அமித் ஷா பற்றித்தான் எனது அடுத்த பதிவு.  ஏற்கனவே எழுதியதுதான். அதை வெளியிடுவதற்கு முன்பாக இந்த பதிவை அந்த அனானி எழுத வைத்து விட்டார். அந்த பதிவைப் படித்த பின்பு எத்தனை மொழிகளில் எவ்வளவு பின்னூட்டம் எழுதப் போகிறாரோ என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.

6 comments:

  1. சரியான பதிலடி தொடரட்டும் தங்கள் குரல் உரக்க ஒலிக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் தோழர். இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படப் போவதில்லை

      Delete
  2. Sir, if you publish those vulgar comments then it is shame to the anonymous person. Since you are not publishing those comments then that idiot is take it granted. This situation is analogues to sexual harassment made by the superiors to their female subordinates. As long as the females are keeping mum those perverts take the advantage.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். ஆனால் நாகரீகம் என்று ஒன்று உள்ளதல்லவா?

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அதை யாரிடமாவது, ஏன் உன் தங்கையிடமோ, மகளிடமோ, அம்மாவிடமோ நேரில் சொல். துடைப்பக்கட்டை பிய்ந்து போகும் அளவு
      அடி வாங்குகையில் தெரியும், அது ஆபாசமா இல்லையா என்று

      Delete