Tuesday, October 31, 2017

புரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ




புரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ
தமிழா நீ புரிஞ்சுக்கோ
 
பிழைப்புக்காக மதவெறியைத்
தூண்டி கலவரம் செய்யறவன்
மனிதனா? மனிதனா?

புரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ
தமிழா நீ புரிஞ்சுக்கோ

கலவரம் செஞ்சுக்கிட்டே
அண்டா பிரியாணியை
திருடிக்கிட்டு போறவன்
மனிதனா? மனிதனா?
 
புரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ
தமிழா நீ புரிஞ்சுக்கோ

கேன்ஸர் வந்தா கூட
கோமியத்தை குடிக்கச்
சொல்லி உனக்கு  மட்டும்
சொல்லி விட்டு
தொண்டை வலிக்காக
ஹாஸ்பிடல் போறவரு
மனிதனா? மனிதனா?
 
புரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ
தமிழா நீ புரிஞ்சுக்கோ

உன்னை மட்டும் உசுப்பேத்தி
தான் ஜாக்கிரதையா
பதுங்கிக் கொள்ளும்
ஆட்கள் எல்லாம்
மனிதனா? மனிதனா?

 
புரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ
தமிழா நீ புரிஞ்சுக்கோ

வாயைத் திறந்தா
பொய் மட்டும் பேசறவங்க
மனிதனா? மனிதனா?
 
புரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ
தமிழா நீ புரிஞ்சுக்கோ

பின் குறிப்பு 1 : புரிஞ்சுக்கோ, தெரிஞ்சுக்கோ என்று ஓர் இசைக்காவியம்   படைத்த இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத்திற்கு இப்பாடல்   சமர்ப்பணம்.

பின் குறிப்பு 2 : இந்த இசை அமுதத்தை பருக இந்த இணைப்பை க்ளிக்  
செய்யுங்கள்.

பின் குறிப்பு : இந்த இசைப் பொக்கிஷத்தை கண்டறிந்து உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்து நமக்கெல்லாம் ஈடு இணையற்ற சுகானுபவத்தை அளித்த வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. நீங்களும் அவசியம் சொல்லி விடுங்கள். 



 

 
 

No comments:

Post a Comment