Tuesday, October 24, 2017

பயமா மோடி?



குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது.

ஆளும் கட்சியிடமிருந்து ஆதாயம் பெற்றவர்தான் தலைமை தேர்தல் ஆணையர் என்ற குற்றச்சாட்டு வருகிறது. 

முன்னொரு நாள் வேறு ஒரு தலைமை தேர்தல் ஆணையரை மதத்தைச் சொல்லி இழிவுபடுத்திய மோடி, தேர்தல் ஆணையரை விமர்சிக்க யாருக்கும் உரிமை கிடையாது என்று பதறுகிறார்.  

மிகப் பெரிய அளவில் சர்ச்சைகள் வந்த பின்னும் எதன் மீதோ மழை பெய்தது போல தேர்தல் ஆணையம் மௌனம் காக்கிறது. 

வெளிநாடுகளுக்குப் போகும் அதே வேகத்தோடு மோடி குஜராத்திற்கும் போய்க் கொண்டே இருக்கிறார். வழக்கம் போல வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டே இருக்கிறார்.

இப்போது வெடித்துள்ள புது அணுகுண்டு - பட்டேல் ஜாதி அமைப்பின் தலைவர்களை இழுக்க ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் என்ற பேக்கேஜ் டீல்.

குஜராத்தில் தோற்று விடுவோம் என்று பயம் வந்து விட்டதா மோடி?

அதனால்தான் இத்தனை வேலைகளா?

 

1 comment:

  1. while the election commission partial against sasikala/dinakaran you people are keeping mum, because they are corrupted. Then how you can expect something good from same election 'commission'.

    ReplyDelete