Wednesday, October 4, 2017

மூன்று நாட்கள்தான். அதற்குள்ளாக . . .




அக்டோபர், 1, 2 தேதிகளில் ஆரணியில் எங்கள் வேலூர் கோட்டச் சங்க மாநாடு. நேற்று நோயுற்ற ஒரு உறவினரைப் பார்க்க சென்னைக்கு ஒரு அவசரப்பயணம். 

அதனால் மூன்று நாட்கள் வலைப்பக்கம் பக்கம் வர முடியவில்லை. இன்று காலை ஒரு நல்ல மனிதரிடமிருந்து

"தோழரே
என்ன ஆளையே காணோம்? 
(தப்பான த்ங்கிலிஷில் L இல்லை. ஆனாலும் நான் புரிந்து கொண்டேன்)
ஆரணியில் அடி அதிகமா?
இல்லை
சரக்கு இல்லையா?"

என்று ஒரு பின்னூட்டம். 

மூன்று நாட்கள் எதுவும் எழுதவில்லை என்பதால் செத்துப் போய்விட்டேன் என்று  அந்த நல்ல மனிதன் மகிழ்ச்சியடைந்து விட்டார் போல.

அப்படியெல்லாம் அவர் மகிழ்ச்சியடைய நான் அனுமதிக்கப் போவதில்லை. 

அதுவும்

வெற்றிகரமாக மாநாடு நடந்து முடிந்த மகிழ்ச்சியில் இருக்கிற போது . . .

மோடி, எடப்பாடி வகையறாக்கள் ஆட்சியில் இருக்கும் போது சரக்கு தீர்ந்து போகும் வாய்ப்பே கிடையாது.

எழுதுவேன். நிறையவே எழுதுவேன்.

மாநாடு பற்றியும் மற்றவை பற்றியும் மாலையிலிருந்து மீண்டும் எழுதுவேன்.

பின் குறிப்பு 

எங்கள் கோட்ட மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி அசத்திய ஆரணி கிளைச்சங்கத் தோழர்களுடன் கோட்டச்சங்க, தென் மண்டல, அகில இந்திய பொறுப்பாளர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் மேலே உள்ளது. 

No comments:

Post a Comment