Saturday, October 21, 2017

நீங்க பூசாரியாவே திரும்பி போயிடுங்க யோகிசீ!





கோரக்பூர் மடத்தின் தலைமைப் பூசாரி என்ற கடமையை செய்திட மாதம் ஐந்து நாள் லக்னோவிலிருப்பதற்குப் பதிலாக கோரக்பூர் போய் விடப் போவதாக தொலைக்காட்சிகளில் ஒரே ஒரு முறை செய்தி வந்ததாகவும் அதற்குப் பிறகு அந்த செய்தி மறைக்கப்பட்டு விட்டதாகவும் பிரபல பத்திரிக்கையாளர் திரு குல்தீப் நய்யார் தெரிவித்துள்ளார்.

எதற்கு சார் வெறும் ஐந்து நாள் மட்டும் யோகிசீ பூசாரி வேலை பார்க்கனும்?

முதலமைச்சர் வேலையை ராஜினாமா செய்திட்டு மொத்தமாகவே பூசாரி வேலையை பார்க்க போயிடுங்களேன்.

மூன்று வருடமாக பிரதமராக மோடி எதையும் கிழிக்காதது போல நீங்களும் முதல்வராக எதையும் கிழிக்கவில்லை. கிழிக்கப் போவதும் இல்லை.

ஆனால்

உங்கள் ஆட்சியில் குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றன.

நீங்களோ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடினீர்கள், தீபாவளி கொண்டாடினீர்கள், ராமர் வேடம் போட்டவர்களுக்கு சூடம் ஏற்றி தீபாரதனை காண்பித்தீர்கள்.

உங்கள் மாநிலத்து பிரச்சினைகளை தீர்க்க துப்பில்லாமல் கேரளாவிற்குப் போய் வெற்று உதார் விட, அவர்களால் வறுத்தெடுக்கப்பட்டு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று புற முதுகெட்டு ஓடி வந்து விட்டீர்.

ஒரு படத்தில் வடிவேலுவைப் பார்த்து பலரும் சொல்வார்கள்.

“இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்”

அது போலத்தான்

நீங்க முதலமைச்சர் பதவிக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க.
அதனால பூசாரியாவே திரும்பப் போயிடுங்க . . .

No comments:

Post a Comment