Thursday, October 26, 2017

வேலூர் மக்களின் கனிவான கவனத்திற்கு . . .

தமிழ்நாடு தீண்டாமை முன்னணி போல பல மாநிலங்களில் செயல்படுகிற அமைப்புக்களை  ஒருங்கிணைத்து "ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி"  (DALITH SOSHAN MUKTHI MANCH)  அமைக்கப் பட்டது.

அந்த அமைப்பின் அகில இந்திய மாநாடு வரும் 4 நவம்பர் 2017 முதல் 6 நவம்பர் 2017 வரை மதுரையில் நடைபெறவுள்ளது. ஆறாம் தேதி மாலை பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன்  உரையாற்றவுள்ளார்.

இம்மாநாட்டை ஒட்டி எங்கள் வேலூர் கோட்டச்சங்கத்தின் சார்பில் இன்று வேலூரில் "சமூக நீதி பாதுகாப்பு மாநாடு" நடத்துகிறோம். எங்கள் தென் மண்டல துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

மாலை 5.30 மணிக்கு எங்கள் சங்க அலுவலகம் சரோஜ் இல்லத்தில் நடைபெறவுள்ளது. ஆற்காடு சாலை கிரவுன் தியேட்டருக்கு பின்னே உள்ள நாகாலம்மன் கோயில் தெருவில் சரோஜ் இல்லம் உள்ளது.

வேலூர் மற்றும் அருகாமையில் உள்ளவர்களை இந்நிகழ்வுக்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்



2 comments:

  1. தலித் மக்களுக்கான போராட்டத்தில் விசிக இல்லை .. கேவலம்

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் என்ன அர்த்தத்தில் சொல்லியுள்ளீர்கள் என்று புரியவில்லை.

      விசிக வை ஏன் அழைக்கவில்லை என்று கேட்டுள்ளீர்கள் என்று கேட்டதாக எடுத்துக் கொள்கிறேன். நேரப்பிரச்சினை காரணமாக ஒரே ஒரு முக்கியப் பேச்சாளரை மட்டும் முடிவு செய்தோம். மதுரையில் நடைபெறவுள்ள அகில
      இந்திய மாநாட்டில் தோழர் தொல்.திருமாவளவன் பங்கேற்கிறார்.

      விசிக தலித் மக்களுக்கான போராட்டத்தில் இல்லை என்பது உங்கள் கருத்தென்றால் அது தவறான புரிதல்

      Delete