Monday, October 16, 2017

அடித்துக் கொல், அரசு வேலை நிச்சயம்





பேயரசு ஆட்சி செய்தால்

பிணம் தின்னும் சாத்திரத்தோடு நிறுத்திக் கொள்ள முடியுமா என்ன?

யாரை வைத்து அவர்களால் ஆட்சி நடத்த முடியும்?

திருடர்கள், கொள்ளைக்காரர்கள், மோசடிப் பேர்வழிகள், பதுக்கல் பேர்வழிகள், கொலைகாரர்கள், கூலிப்படை  ஆகியோர் பக்கபலமாக இருந்தால்தானே  அந்த ஆட்சி பேயரசுக்கான தகுதியோடு இருக்க முடியும்.

அதனால்தான்

மாட்டுக்கறி வைத்திருந்ததாக பொய்யாக குற்றம் சொல்லி முதியவர் அக்லக்கை உத்திர பிரதேச மாநிலம் தாத்ரியில்  அடித்துக் கொன்ற குற்றவாளிகளுக்கு தேசிய அனல் மின் நிலையக் கழகம் (National Thermal Power Corporation)  வேலை  கொடுத்தது

வியப்பளிக்கவே இல்லை.

நாளை அங்கே தொழிலாளர்கள் ஏதாவது போராட்டம் நடத்தினால் அதை ஒடுக்குவதற்கு அடியாட்கள் வேண்டுமல்லவா? இந்த கொலைகாரர்கள் அதற்கு சரிப்பட்டு வருவார்கள்தானே!

மோடியின் ஆட்சி இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது.

இதை விட இன்னும்  கேவலமாகக் கூட  ஏதாவது  நடக்கும். 

அதிர்ச்சி அடைய வேண்டாம்.

No comments:

Post a Comment