Monday, March 21, 2022

உலக கவிதை தினமாம்.

 


உலக கவிதை தினமாம்.

கவிதையென்று எதை எழுத?
 
காதல் கவிதை எழுத
காலம் கடந்து போனது!
 
வாழ்ந்த கதையை எழுத
வயதானவனாய் உணரவில்லை.
 
வறுமையின் கொடுமையை எழுத
அதை அனுபவிக்கவும் இல்லை!
மாற்றி எழுத நினைத்தால்
செல்வக்குவியலிலும் மிதக்கவில்லை!
 
உண்மையை எழுதலாம்,
இயற்கையை எழுதலாம்.
போராட்டத்தை எழுதலாம்.
 
கவிதையாய் எழுதுவதுதான்
எப்போதும் சிக்கலென்பதால்
கவிஞர்களுக்கு வாழ்த்து சொல்லி
கவிதைகளின் ரசிகனாகவே
தொடர்வேன் நான் . . . .

 

No comments:

Post a Comment