Monday, March 21, 2022

ஒன்னும் தெரியாத ஓ.பி.எஸ்???

 


ஏ 1 மறைவில் உள்ள மர்மங்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிற ஆறுமுகசாமி கமிஷனில் “தனக்கு ஏதும் தெரியாது” என்பதையே பதிலாக ஓ.பி,எஸ் சொன்னதற்காக அவரை பலரும் கலாய்த்துக் கொண்டிருக்கிறார். ஏ 1 மறைவுக்கு நியாயம் கேட்டுதானே அவங்க சமாதியில் தர்ம யுத்தம் நடத்தினாய் என்றும் பலர் அவரை கேள்வி கேட்கிறார்கள்.

அப்படி ஒன்றும் அவர் ஒன்னும் தெரியாத மண்ணாங்கட்டி அல்ல.

ஏ 1 மறைவு குறித்த விசாரணை முழுமையாக ஒழுங்காக நடந்தால் அது ஏ 2 வை நோக்கியே செல்லும் என்பதை நன்றாக அறிந்தவர் அவர். இப்போது அவர் ஏ 2 வை நோக்கி செல்ல இருப்பதால் ஒன்றும் தெரியாது என்று சொல்லி விட்டார். அவ்வளவுதான். ஒன்னும் தெரியாது என்று சொல்ல ஏ 2 விடம்  என்ன பேரம் நடத்தினார் என்பதுதான் அவரிடம் கேட்க வேண்டிய சரியான கேள்வி.

அப்போ தர்ம யுத்தம்?

அதுதான் விஷமூர்த்தி முன்னாடியே சொல்லிட்டாரே! “நீயெல்லாம் ஒரு ஆம்பளயா? போய் அந்தம்மா சமாதியில உக்காருன்னு நாந்தான் சொன்னேன்” என்று.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. இப்போ என்ன சொல்ல வரீங்க? நீங்க என்ன மநீம வா? ஒரு எழவும் புரியலை. கெட்ட வார்த்தை பேசினதால் உங்க பின்னூட்டத்தை நீக்கி விட்டேன்

    ReplyDelete