Thursday, March 31, 2022

இதுதாங்க தமிழ்நாடு

எங்கள் சேலம் கோட்டத் தலைவர் தோழர் நரசிம்மன் பகிர்ந்து கொண்ட புகைப்படமும் செய்தியும் கீழே உள்ளது.

படமும் அத்துடனுள்ள செய்தியும்

மத நல்லிணக்கமும் மக்கள் ஒற்றுமையும் வேரூன்றியுள்ள மாநிலம் தமிழ்நாடு. எத்தனை ஆட்டுக்காரர்கள் வந்தாலும் அதனை இங்கே சிதைக்க முடியாது என்பதை மட்டுமல்ல தாமரை இங்கே கருகித்தான் போகும் என்பதைத்தான் அழுத்தமாக உரைக்கிறது. முதல்வராக தனக்கு தகுதியில்லை என்பதை ஒப்புக் கொண்ட அண்ணாமலை, பாஜகவின் வேறு யாருக்கும் கூட இங்கே முதல்வராக வாய்ப்பில்லை என்பதையும் உணர்ந்து கொண்டு அவர் சொன்னது போலவே ஆடு மேய்க்க சென்று விடலாம்.


 👆🏻 இந்த புகைப்படம் நேற்று சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் எடுக்கப்பட்டது. இளம்பிள்ளை பகுதி முழுவதும் அம்மன் பண்டிகையை ஒட்டி விழாக் கோலம். நகரத்தின் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை. மக்கள் திருவிழாவாக அம்மன் பண்டிகை நடக்கிறது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி அங்கு முஸ்லிம் மதத்தை சேர்ந்த குழந்தைகள் தங்கள் மத நம்பிக்கை படி உடை அணிந்து பள்ளி தேர்வு எழுத கூட வரமுடியாத நிலை...

ஆனால் தமிழகத்தில் ஒரு மதம் சார்ந்த விழாவில் மாற்று மதத்தை சேர்ந்த குழந்தைகள் கூட பங்கேற்று உற்சாகமாக விளையாட கூடிய நிலை. 

இது தான் மதவாத சக்திகளின் ஆட்சிக்கும் ஜனநாயக சக்திகளின் ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு. 

இது போன்று அனைத்து பகுதி மக்களும் ஒற்றுமையாக ஒரு ஜனநாயக ஆட்சியில் தான் வாழ முடியும். பெரும்பான்மை அல்லது சிறுபான்மை எந்த மதம் சார்ந்த ஆட்சியிலும் இந்த மக்கள் ஒற்றுமைக்கு சாத்தியம் இல்லை.

No comments:

Post a Comment