Wednesday, March 16, 2022

காஷ்மீர்- பாகிஸ்தானுக்கே போ சங்கிகளே

 


காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தின் பிரச்சாரகர்களாக மோடி உள்ளிட்ட சங்கிகள் மாறி இருக்கிறார்கள். அவர்களின் பிரச்சாரத்திற்காக, சங்கி ஒருவராலேயே அந்த படம் எடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை.

காஷ்மீர் பற்றியெல்லாம் பேச சங்கிகளுக்கு அருகதையே கிடையாது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காஷ்மீர் கிளை, காஷ்மீர் இந்தியாவுடன் இணையக் கூடாது என்று போராட்டம் நடத்தியது. இந்து மன்னராக இருந்த ஹரிசிங்கும் இந்தியாவுடன் இணைய விரும்பவில்லை.

அன்றும் சரி, இன்றும் சரி மக்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்களே. இஸ்லாமியர்களை பிரதிநிதித்துவப் படுத்திய தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவராக ஷேக் அப்துல்லாதான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று விரும்பியவர். மன்னருக்கு அழுத்தம் கொடுத்தவர்.

அப்போது அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகைகளை நீர்த்துப் போக வைத்து காஷ்மீரை நாசமாக்கியது காங்கிரஸ் கட்சியின் அரசு. அவர்கள் முதல் குற்ற்றவாளி.  காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை நீர்த்துப் போக வைக்க நிர்ப்பந்தித்த ஆர்.எஸ்.எஸ் சங்கி வகையறாக்கள் இரண்டாவது குற்றவாளி.

ஆகவே காங்கிரஸ் கட்சி மீது பழி போட்டு சங்கிகள் தப்பித்துக் கொள்ளக் கூடாது.

நியாயப்படிப் பார்த்தால் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்த போதே அதற்கு எதிரான சங்கிகள், ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் அவர்களை பின்பற்றிய ஒரு ஆட்டு மூளைக் கூட்டத்தினர், காஷ்மீரிலிருந்து வெளியேறி பாகிஸ்தான் போயிருக்க வேண்டும்.

அல்லது

விஸ்வாமித்திரர் மாதிரி யாராவது முனிவரைப் பிடித்து எப்படி அவர் திரிசங்குக்காக அந்தரத்தில் ஒரு சொர்க்கத்தை உருவாக்கினாரோ, அது போல விண்வெளியில் ஒரு தனி நாட்டை உருவாக்கித் தரச் சொல்லியிருக்க வேண்டும்.

அல்லது

குறைந்த பட்சம்  இமய மலையின் உச்சியிலிருந்து குதித்து செத்திருக்கவாவது  வேண்டும். (இப்படி பேசுவது அராஜகமாக தோன்றலாம். ஆனால் அதுதானே சங்கி மொழி) 

அதை விட்டு இப்போ கதையளப்பது எல்லாம் ரொம்பவே ஓவர்.

பிகு : பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டது மிகப் பெரிய தவறு. குற்றம். ஆனால் இந்த திரைப்படம் சொல்லும் அளவிற்கு கொடூரமா? அதற்கு காங்கிரஸ் கட்சியும் இஸ்லாமியர்களும் மட்டும்தான் பொறுப்பா? மற்றவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாதா?

நாளை பார்ப்போம்.

 

2 comments:

  1. If lakhs of people had to leave their homes and become refugees in their own country, it obviously means that they KNEW that their life, limbs, property and honor were no longer safe there. How mean of some pseudo liberals to argue that they were forced or duped to flee!

    ReplyDelete
    Replies
    1. Yeah! It is really a horror. But one should not be selective with one group only. Muslims in Gujarat and Mussafarnagar also are Indians. Is it not Mr Indian?

      Delete