Wednesday, March 16, 2022

எதிர்க்கட்சியான பின்பும் எங்கிருந்து????

 



 முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் நேற்று ரெய்ட் நடந்துள்ளது. ஏற்கனவே அவர் வீட்டிலிருந்து ஏராளமான தங்கம், வெள்ளி, ரொக்கம் எல்லாம் கைப்பற்றப்பட்டு விட்டது.

 இரண்டு மாத இடைவெளியில் மீண்டும் நடந்த ரெய்டின் போது கணக்கில் வராத சொத்தாக பத்து கிலோ தங்கம், முப்பத்தி ஐந்து லட்ச ரூபாய் ரொக்கம், இத்யாதி இத்யாதி எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 ஆட்சியில் இருந்தால் அவரது பலே திறமைக்கு இரண்டு நாட்களிலேயே இதை சேர்க்கும் வல்லமை கொண்டவர்தான் அவர். ஆட்சியில் இல்லாத போதும் எப்படி இவ்வளவு பணம் குவிகிறது?

 அவர் வணிகம் செய்து கிடைத்த பணம் என்று சொல்லாதீர்கள். அப்படி அவர் முறையான வணிகம் எதையாவது செய்திருந்தால் அது கணக்கில் வந்திருக்கும், வந்திருக்க வேண்டும்.

 ஆனாலும் வருகிறது என்றால்

 அதிகார வர்க்கத்தை இன்னும் அவர் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்பதுதான் அதற்கு அர்த்தம்.

 மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அர்த்தம்.

 

No comments:

Post a Comment