Saturday, March 12, 2022

பாகிஸ்தானுக்குப் பறந்த ஏவுகணை

 


ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முக நூல் பதிவை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



பாகிஸ்தான் மீது ‘தவறாக’ ஏவப்பட்ட இந்திய ஏவுகணை

மார்ச் 9 அன்று ஒரு இந்திய ஏவுகணை பாகிஸ்தானுக்குள் ஏவப் பட்டிருக்கிறது. அந்நாட்டின் எல்லையை மீறி 124 கிமீ வரை சென்றிருக்கிறது.,

பாகிஸ்தான் இந்திய வெளியுறவு அதிகாரியிடம் விளக்கம் கேட்டிருக்கிறது.

வழக்கமான பராமரிப்பு வேலை நடக்கும் போது தவறுதலாக ஏவப்பட்டு விட்டது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

நல்ல வேளை, உயிர்ச் சேதம் எதுவும் இல்லையென்றும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறது.

ஒரு வேளை சங்கிகள் அடிக்கடி ‘பாகிஸ்தானுக்குப் போ’ என்று சொல்வதை அந்த ஏவுகணை கேட்டிருக்குமோ?

பின் குறிப்பு : நேற்று ஒரு லோக்கல் சேனலில் "தேவர் மகன்" படம் பார்த்தேன். நாசரின் ஆட்கள் கமலஹாசனை லாரி ஏற்றி கொல்லப் பார்ப்பார்கள். தப்பித்த பின்பு கமலஹாசன் ரேவதியிடம் "இது ஆக்ஸிடெண்ட்தான் என்று வீட்டில் சொல்ல வேண்டும்" என்பார். "இது நிஜமாகவே ஆக்ஸிடெண்ட்தானா?" என்று ரேவதி வெள்ளந்தித்தனமாக கேட்பார். அந்த அப்பாவித்தனம் மிகவும் பிடித்ததால் அந்த காட்சியை முகப்புப் படமாக வைத்துள்ளேன்.

அந்த படத்திற்கும் பதிவிற்கும் தொடர்பு உண்டு என்று யாராவது நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல. .

No comments:

Post a Comment