Tuesday, March 8, 2022

இதுதான்யா தீர்ப்பு

 


இன்று வந்த நல்ல செய்தி இது.

ஆணவக் கொலையும் செய்து விட்டு எவ்வளவு திமிராக காவல்துறைக்கு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பிக் கொண்டிருந்தான். இந்த புகைப்படத்திலேயே அவனின் ஆணவம் தெரிகிறது.

"எழுத்தாளர் பெருமாள் முருகன் இறந்து விட்டான்" என்று வெறுத்துப் போய் அறிக்கை கொடுத்ததிலும் இவனுக்கு முக்கிய பங்கு உண்டாம்.

ஆணவம் பிடித்தவர்கள் தலையில் சம்மட்டி அடியாக விழுந்துள்ள இத்தீர்ப்பு வாழ்க!

இத்தீர்ப்பிற்காக கடுமையாக சட்டப்போராட்டம் நடத்திய வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

இத்தீர்ப்பு உயர் நீதிமன்றத்தில் நீர்த்துப்போகாமல் மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வழக்கை கையாண்ட டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவை தற்கொலைக்கு தூண்டிய அயோக்கியர்களையும் கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும். 

No comments:

Post a Comment