Thursday, March 24, 2022

நீ பாவம்யா அண்ணாமலை


 
மோடி பேசுவதற்கு உரை எழுதிக் கொடுக்கும் ஏதோ ஒரு டுபாக்கூர் ஆலோசகர்தான் ஆட்டுக்காரருக்கும் ஆலோசகர் போல.

என்ன ! யார் என்ன கழுவி கழுவி ஊற்றினாலும் வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் எனக்கு கிடையாது என்று மோடி துடைத்துக் கொண்டு போய் விடுவார்.

"எனக்கு கர்னாடகா முகம் ஒன்னு இருக்கு" என்று "நான் போலீஸ் இல்லை பொறுக்கி" என்ற வசனத்தை மாற்றிப் பேசியதால் ஆட்டுக்காரர் சொன்ன பொய்யை நிரூபிக்க அடுத்த பொய்யை சொல்லி அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்.



29,000 புத்தகம் படித்ததாக சொன்ன பொய்யை விட இந்த சமாளிப்பு இன்னும் கொடுமையாக, காமெடியாக உள்ளது.

பலியிடப்படும் ஆடாக யாரிடமோ ஆட்டுக்காரர் சிக்கிக் கொண்டுள்ளார். தப்பித்து ஆடு மேய்க்கவே போவது அவருக்கு நல்லது. அரசியலில் இருந்தால் அன்றாடம் அசிங்கப்பட வேண்டியிருக்கும். 

No comments:

Post a Comment