Thursday, January 9, 2020

இவனுங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு




மத்திய கிழக்கு பகுதி பதட்டமாக இருக்கிறது. இராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது இரான் ஏவுகியணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இரானிலிருந்து புறப்பட்ட இரண்டு நிமிடங்களில் உக்ரேனிய நாட்டு விமானம் ஒன்று நொருங்கியுள்ளது. காரணம் என்னவென்று தெரியவில்லை.

டொனால்ட் ட்ரம்ப் இரான் மீது போர் நடத்தும் முடிவிலிருந்து கொஞ்சம் பம்முகிறார்.

மத்திய கிழக்கு பகுதியிலிருந்து அமெரிக்காவை அப்புறப்படுத்துவோம் என்று இரான் தலைவர் கொமேனி சூளுரைக்கிறார்.

இவ்வளவு பதட்டம் நிறைந்த சூழலில் சங்கிகள் காமெடி செய்கிறார்கள்.

“போரை நிறுத்த இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று இரான் கேட்டதாகவும் இதனால் மோடி உலகத் தலைவராகி விட்டதாகவும் இவர்களே ஒரு கட்டுக்கதையை பரப்பி வருகிறார்கள்”

இரான் தளபதியை அமெரிக்கா கொன்றதற்கு ஒரு சிறிய கண்டனம் கூட தெரிவிக்காத, அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிகிற கோழை மோடியிடம் போய் இரான் மத்தியஸ்தம் செய்யச் சொல்லி கேட்குமா என்று கூட யோசிக்கத் தெரியாத மூடர் கூட்டம் இந்த டுபாக்கூர் செய்தியை பரவசத்துடன் பரப்பி தாங்கள் முட்டாள்கள் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களிடம் ஒன்றை சொல்லிக் கொள்ள வேண்டும்.

“மூடர்களே, நாங்கள் மோடியை இந்தியாவின் தலைவராக அல்ல, ஒரு மனிதனாகக் கூட ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அவரைப் போய் உலகத்தலைவர் என்றெல்லாம் பில்ட் அப் கொடுத்து அசிங்கப்படாதீர்கள்”



No comments:

Post a Comment