Saturday, January 18, 2020

கேட்டுப் பெறுவதல்ல மரியாதை மிஸ்டர் மோடி


என்னை இனிமேல் "கோபாலகிருஷ்ணன்" என்றுதான் அழைக்க வேண்டும் என்று இறைஞ்சிய "சப்பாணி" போல 

"உங்கள் பிரதமரை மதியுங்கள்" என்றொரு ஹாஷ்டாக் பிரச்சாரத்தை துவக்கியுள்ளனர் சங்கிகள். இப்படிப்பட்ட பிரச்சாரமே அவர் பிரதமராக நீடிக்க தகுதியில்லாதவர் என்பதற்கான சான்று. வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை இருந்தால் ராஜினாமா செய்ய வேண்டுமே தவிர இப்படி மரியாதையையெல்லாம் யாசிக்கக் கூடாது.

மோடி இந்தியாவின் பிரதமரானது, மீண்டும் நீடிப்பது இந்திய தேசத்தின் மிகப் பெரிய துயரம்.

அடிப்படையில் மோடி யார்?

ஒரு கொலை காரர்,
ஒரு பொய்யர்,
ஒரு ஏமாற்றுப் பேர்வழி,
ஒரு மத வெறியர்,
ஒரு ஆணாதிக்கவாதி,
ஒரு பிளவுவாதி,
ஒரு தரகர்,
ஒரு முட்டாள்.



இதைத்தாண்டி மதிக்கக் கூடிய குணாம்சம் என்று மோடியிடம் என்ன இருக்கிறது? மதிக்கக் கூடிய விதத்தில் அவருடைய எந்த நடவடிக்கை அமைந்துள்ளது?

போட்டோஷாப் மூலமும் அடித்து விடும் அளவற்ற பொய்கள் மூலமும் "அவரு நல்லவரு, வல்லவரு" என்ற கட்டுக்கதைகளை துக்ளக் படிக்கும் அறிவாளிகள் வேண்டுமானால் அவரை பிரமிப்போடு பார்க்கட்டும், நம்பட்டும், அவர்கள் மீது நம்மால் பரிதாபப்பட முடியுமே தவிர மோடியை மதிக்க முடியாது.

சப்பாணியை கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கலாம். ஆனால் மோடியை மதிப்பது என்பதெல்லாம் சாத்தியமே அல்ல.

பிகு: என்ன இருந்தாலும் பிரதமர் அல்லவா என்று யாரும் உபதேசிக்க வராதீர்கள். நேரு என்ற மாமனிதனை சங்கிகள் இழிவு படுத்த வேண்டாம் என்று அங்கே சென்று உபதேசியுங்கள்.

நேருவையே அவர்கள் கேவலமாக பேசுகையில் நேருவின் நிழலைக் கூட நெருங்க அருகதையில்லாத மோடியெல்லாம் வெறும் சுண்டைக்காய் . . .

2 comments:

  1. sundaikkai is recommended to increase heamoglobin in naattu marunthu. it is not so a mean item to be compared with ....

    ReplyDelete
  2. உண்மை. சுண்டைக்காய் மோடியை விட மேல்

    ReplyDelete