Saturday, January 4, 2020

செத்தது அமெரிக்க தளபதியென்றால்????


இரானின் தளபதி காசீம் சுலைமானி அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டார்.

என்னுடைய ஆணைப்படியே அவர் கொல்லப்பட்டார் என்று டொனால்ட் ட்ரம்ப் பீற்றிக் கொள்கிறார். பதவி நீக்கம் பிரச்சினையில் சிக்கியுள்ள அவருக்கும் ஒரு திசை திருப்பும் நடவடிக்கை தேவைப்படுகிறது. 

நடந்த கொலையை விட எரிச்சலூட்டுவது இந்திய அரசின் அறிக்கைதான்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு யாரும் எதுவும் எதிர்வினையாற்றக் கூடாது, அமைதியாகவும் பொறுமையாகவும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடும் இருக்க வேண்டும் என்று சொல்கிறது இந்திய அறிக்கை. 

இதுவே தாக்குதலில் செத்துப் போனது அமெரிக்க தளபதி என்றாலும் இந்திய அறிக்கை இப்படித்தான் உபதேச பாணியில் இருக்குமா?

ட்ர்ம்பை விட வெறிக் கூச்சல் கொண்டதாக அமைந்திருக்கும்.

இந்த அரசிடம் நேர்மை எல்லாம் எதிர்பார்ப்பது வீண்.

No comments:

Post a Comment