Saturday, January 11, 2020

ரஜனி படங்களே மேல்




ரஜனிகாந்த் நடித்த “தளபதி” படத்தில் அவர் முதலில் மம்முட்டியின் அடியாட்களில் ஒருவரை போட்டு அடிப்பார். அவர் இறந்த பிறகு ரஜனியை கைது செய்வார்கள். பிறகு ரஜனி அடித்தது நியாயம் என்று மம்முட்டி உணர்வதால் அவர் வேறு ஒரு அடியாளை அந்த கொலையை நான்தான்  செய்தேன் என்று  ஸ்டேட்ஜெண்ட் கொடுக்க வைத்து  சிறைக்கு அனுப்பி ரஜனியை வெளியே கொண்டு வருவார்.

அது போல ரஜனிகாந்த் நடித்த இன்னொரு  படமான சிவாஜி படத்தில் கூட அவர் அமைச்சர் வி.எம்.சி.ஹனீபாவை கத்தியால் குத்துவார். அவருக்கு பதிலாக ஒரு அடியாள் குற்றத்தை சுமந்து கொண்டு  சிறைக்குச் செய்வார்.

இந்த படங்களே மேல் என்றாகி விட்டது இப்போது.

புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது அராஜக தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதான ரௌடிப் படையான ஏ.பி.வி.பி அமைப்புக்கு பினாமியாக ஹிந்து ரக்சா தள் என்று ஒரு அமைப்பு தாங்கள்தான் தாக்குதலை நடத்தினோம் என்று பொறுப்பேற்றுக் கொண்டது.

ஆனால் அந்த பினாமிகளைக் கூட கிரிமினல்ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸ் இதுவரை கைது செய்யவில்லை.

அப்படி கைது செய்தால் உண்மையான குற்றவாளிகளை ரௌடித்தனம் செய்ய அனுமதித்து விட்டு தாக்குண்டவர்கள் மீதே வழக்கு பதிவு செய்த அயோக்கியத்தனம் அம்பலமாகி விடுமல்லவா!


No comments:

Post a Comment