Friday, January 24, 2020

புளிச்ச மாவு ஏன் பொங்கியது?


புளிச்ச மாவு ஜெமோ லேட்டஸ்டாக தனது வக்கிரத்தை தோழர் பாலபாரதி மீது வெளிப்படுத்தியுள்ளார்.

டோல்கேட் பிரச்சினை தொடர்பாக அவரது வழக்கமான "நானே கேள்வி, நானே பதில்" பாணியில் ஜெயசீலன் என்னும் பினாமி பெயரில் கேள்வி கேட்டு பதில் சொல்லியுள்ளார்.

ஆடம்பரக் கார் பவனி, காட்டுக் கத்தல். இதர, இதர என்று 
பினாமியாக கேள்வி எழுப்பி

இவருடைய பெயரில்

"ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பம்"
"வாசிப்பையும் எழுத்தையும் பற்றி தெரியாதவர்"
:ஒரு முறை மக்கள் ஓட்டு போட்டு விட்டதால் வந்த ஆணவம்"
"சாமானியனை விட எழுத்தாளனை சமூகம் அதிகமாக மதிப்பதால் வரும் பொறாமை"

என்றெல்லாம் வழக்கம் போல வசை பாடியுள்ளார்.

அய்யா, புளிச்ச மாவு,

பிரச்சினை அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பானது அல்ல. ஒத்தையடிப்பாதை உள்ள சாலைக்கு எதற்கு கட்டணம் என்பதுதான் அங்கே பிரச்சினை. பேச்சுவார்த்தையின் போது துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு எதற்கு வர வேண்டும் என்ற கேள்வியை உமது அறம் ஏனய்யா கேட்கவில்லை?

மேலும் அவர் ஒரு முறை எம்.எல்.ஏ அல்ல. திண்டுக்கல் மக்கள் மூன்று முறை அவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இது கூட தெரியாத நீரெல்லாம் தமிழகத்தின் பெரீய்ய்ய்ய எழுத்தாளராம்! உமக்கு தெரியும். ஆனாலும் ஒரு முறை எம்.எல்.ஏ என்று சொல்லி சிறுமைப்படுத்த நினைப்பது உமது இழி குணம். 

அதென்னங்கடா? கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ காரில் போனால் உங்களுக்கு ஏன் இப்படி வேகுது?

எளிமையாக இருப்பது என்பது நடந்து போவதல்ல. இன்றைக்கு உள்ள பணிகளில் பயண நேரத்தை குறைக்க வேண்டிய அவசியம் உமக்கெப்படி தெரியும்.

தயாரிப்பாளர் காசில் மாசக்கணக்கில் கடற்கரை உல்லாச விடுதியில் ரூம் போட்டு திருட்டுக் கதைக்கு வசனம் எழுதுகிற நீரெல்லாம் ஆடம்பரம் பற்றி வாய் திறக்கலாமா?

மிஸ்டர் புளிச்ச மாவு இன்னொன்றையும் கேட்டுக் கொள்ளும். 

இரண்டு கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ள கவிஞர் அவர். அதிலே நீர் சொல்வது போல அழகு, உப்பு, இனிப்பு இல்லை என்று உங்கள் எடுபிடிகள் பெயரில் நீரே எழுதலாம். 

ஆனால் அந்த கவிதைகளில் முக்கியமான ஒன்று இருந்தது.

உண்மை, நேர்மை, மக்கள் மீதான நேசம்.

அதெல்லாம் உமக்கு எங்கே புரியும்?

புளிச்ச மாவு பிரச்சினை சமயத்தில் உம்மை அவர் விமர்சித்ததால் ஏற்பட்ட கடுப்பை இப்போது தணித்துக் கொண்டுள்ளீர். 

புளிச்ச மாவு பொங்குவதற்கு காரணமான தோழர் பாலபாரதி அவர்களின் பதிவு கீழே உள்ளது.


No comments:

Post a Comment