Tuesday, December 31, 2019

சென்று வா 2019



இந்திய தேசத்தின் 
இருள் தொடர்ந்த ஆண்டு
ஒற்றுமையை குலைப்பவர்கள் 
உச்சத்தில் அமர்ந்த ஆண்டு
அராஜகப் பேர்வழிகளின் 
அவர்தம் அடிமைகளின்
ஆட்டம் அதிகமான ஆண்டு.

இப்படியொரு ஆண்டு
இனி வேண்டாம் என
முடிக்கத்தான் ஆசை.

தேசமெங்கும் ஒலிக்கும்
போராட்டக்குரல் உரக்க
கேட்டு நம்பிக்கையை
வளர்த்த ஆண்டாகவும்
மாறியது 2019.

கசப்புக்களை மட்டும்
கடத்திக் கொண்டு
சென்று வா 2019.

நம்பிக்கைகளோடு
தொடங்கட்டும் புத்தாண்டு


No comments:

Post a Comment