Tuesday, December 3, 2019

எல்லாமும் சேர்ந்தே எரியட்டும் . . .


தீண்டாமைச்சுவர் கட்டி
ஆணவக் கொலை புரிந்த முதலாளி,

அராஜகத்தை கண்டுகொள்ளாமல்
அலட்சியமாய் இருந்த அதிகார வர்க்கம்,

முதலாளி வீசிய எலும்புத்துண்டுக்காய்
வாலை ஆட்டிச் சென்ற காவலர்கள்,

இறந்தவர் தலித் என்பதால் கள்ள மௌனம்
காக்கும் ஊடகங்கள்,

தீண்டாமைச் சுவர் என்பதை
திசை திருப்பும் அறிவுஜீவிகள்,

"சக்கிலிய நாய்களிடம் கெஞ்ச வேண்டுமா?
முஸ்லீம்களுக்கு இங்கே என்ன வேலை?"

என்று வெறி கொண்டு பேசிய 
மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி மணி

எல்லோரும் எரியட்டும்
பதினேழு பேர் சிதை துயரம்.
இவர்கள் எரிந்தால்
அதுதான்  நீதி . . .

1 comment: